Jun 28, 2009

செங்கால் நாராய்!

நேரிசை ஆசிரியப்பா

செங்கால் நாராய்! செங்கால் நாராய்!
செங்காந் தண்ணுதல் தண்நெஞ் சங்கொள
எங்கோ வில்மன மெய்த வம்பாய்
எண்ணங்க ளோடி என்றும் தேடக்
கண்ணில் காணாக் கன்னியைக் காணா
தென்றும் வருந்தும் இளமட நெஞ்சம்
பொன்றும் வரையில் உணராது
சென்றிடு மோநீ சொல்வாய் நாராய்!


பொருள்: சிவந்த கால்களையுடைய நாரையே! செங்காந்தள் பூவைப் போன்ற நெற்றியைக் கொண்டவளை என் குளிர்ந்த நெஞ்சமானது கொள்ள, என் 'மனம்' என்னும் வில் எய்த 'எண்ணம்' என்னும் அம்பு, இலக்கை அடையாது இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது. அதனால் வருந்தும் என் இள மட நெஞ்சம் இறக்கும் வரையில் என்னவளை உணராது சென்றிடுமோ? சொல்வாயாக!

No comments:

Post a Comment