Feb 28, 2019

உண்டாக்கினேன் புதிய கவிதை என்பான் - எண்சீர் விருத்தம்

கண்மூடித் தனமாக மீண்டும் மீண்டும்
    கண்டுபிடிக் கின்றதுள்ளல் என்னென் றாலோ
தொண்டறிந்த சக்கரத்தைக் காணா மூடர்
    தோண்டியகழ்ந் தெடுத்தபினே சொல்வ தைப்போல்
பண்பட்ட இலக்கணத்தைக் காணா மற்றான்
    பாட்டெழுதும் இலக்கணத்தைக் காணா மற்றான்
உண்டாக்கி னேன்புதிய கவிதை என்பான்
    உருப்பட்ட ஒன்றினையே வேண்டா வென்பான்

Feb 16, 2019

ஆசுகவிச்சுழல்

பைந்தமிழ்ச்சோலையில்  ஆசுகவிச்சுழல் என்னும் இணைய ஆசுகவியரங்கம் 10.02.2019 அன்று நடைபெற்றது.

முதல் அமர்வு:
தலைவர்: மரபுமாமணி பாவலர் மா வரதராசன்
தலைப்பு: அன்பைப் பொழிகுவாய் நன்னெஞ்சே!

கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி

பெரும்புகழ் சேர்க்கும் அன்பே
பேதைமை களையும் அன்பே
அரும்பிய குழந்தை காட்டும்
அரும்பெனும் முறுவல் கண்டே
திருந்துதல் வேண்டும் வையம்
செழிப்பினைக் கூட்டும் உள்ளச்
செருக்கினை அடக்கும் வெள்ளப்
பெருக்கெனத் திகழும் அன்பே 1

அன்பிலா உள்ளத் தாலே
அவலமே மிஞ்சும் மிஞ்சும்
இன்பிலா வாழ்க்கை எங்கே
எதனையும் ஈயார் தேடித்
துன்பமே சூழ வாழ்வார்
துணையென யாரு மில்லார்
நன்மைகள் சேர்க்க மாட்டார்
நானிலம் போற்ற வாழார் 2

வாழ்க்கையென் சக்க ரத்தில்
வண்டியை ஓட்டு தற்குக்
காழ்ப்புகள் நீக்க வேண்டும்
காதலைப் பொழிவ தற்குப்
பாழ்படச் செய்விக் கின்ற
பணமது வேண்டா வேண்டா
ஆழ்மனம் சொல்லும் உண்மை
அன்பொடு வாழ நன்மை 3

நன்மைசேர்த் தின்பம் நல்கும்
நயமிகு வாழ்வை நல்கும்
என்பையும் பிறருக் கீவார்
இணையிலா அன்பு கொண்டார்
வன்மைசேர் பாலை தன்னில்
வற்றிய மரந்த ளிர்த்தல்
அன்பகத் தில்லா வாழ்க்கை
அறிகுவீர் அகிலத் தோரே 4
                          ★★★