Dec 31, 2023

காந்தி ஆசிரியர் - இரங்கற்பா



காலத்தால் அழியாத
காவியமாய்க் கவிமழையாய்
வாழத்தான் விளைந்தவரே
வாழ்வாங்கு வாழ்ந்தவரே!

வருத்தவளை வேயரசர்
மாமுடியின் மேலாம்
கருத்துமழை வழிகாட்டிக்
கண்கலங்கச் சென்றவரே!

ஆங்கிலமும் அருந்தமிழும்
அமுதாக்கிக் கற்பித்தீர்!
தீங்கிரிக்க நாடெல்லாம்
திருக்குறளை எடுத்துரைத்தீர்!

திருக்குறளில் கணிதவியல்
தேர்ந்தெடுத்துச் சொன்னவரே!
திருக்குறளே பெருந்தவமாய்த்
தொழுதெழுந்து வாழ்ந்தவரே!

கணக்குப் பிணக்கறுத்து
மணக்குமெனக் காட்டியவரே!
வணங்குவோம் எம்வாழ்வைச் 
செதுக்கியவரே! ஆசானே!
                                     - கண்ணீருடன் 
தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்