தத்தாதன தத்தாதன தத்தாதன தத்தா
தத்தாதன தத்தாதன தத்தாதன தத்தா
தத்தாதன தத்தாதன தத்தாதன தத்தா - தனதந்தா
முத்தாகிய முற்றோதிய முத்தார்தமிழ் வித்தே
முட்டாகிய முற்றாதன முற்றோடொழி சத்தே
முப்பாலது நிற்பாலது வற்றாததும் எற்றே - குறளன்றே
முத்தேயமும் மிக்காயிசை தைத்தார்மனம் உற்றே
செற்றேயிது குற்றேயடி எற்றேயுரை யுற்றும்
முப்பாலிணை எப்பாலுமில் அக்காலம தித்தே – கொளவென்றே
சித்தாவென முத்தாவென அத்தாவென மற்றே
சொத்தேயென மிக்கோர்மனம் எக்காலமும் பற்றே
தெற்காயொரு பற்றாயவர் முற்றாயவும் நற்றேன் - உணவென்றே
செற்றாரையும் நற்பாலரா நிற்பாரெனும் வித்தா
நெய்ப்பாரவர் தப்பானவை சுட்டாதிலை சற்றே
செப்பாதுள மெய்ப்பாடெது முற்றாவுல கிற்றே - அழகுஞ்சேர்
புத்தாகிய தெக்காலமும் பெற்றோர்நிலை யுற்றோம்
பொற்றாமரை நற்றாளிணை பெற்றேவுயர் வுற்றோம்
பொற்கோவிறை நற்பேருளம் பெற்றோமகிழ் வுற்றோம் – இணையின்றே
புற்றார்மனம் பித்தாயலை வுற்றேநிலை கெட்டால்
உற்றார்துயர் முற்றாவழி தெற்றாவில கிற்றே
பொற்றாநிலை எற்றேயவர் பித்தேயழி வுற்றே - மனமொன்றே
கொக்கோதவ முற்றேயொரு முத்தேயது கொத்தே
அத்தேவழி நிற்றேநிலை சத்தாயொரு மித்தே
கொத்தாயென வித்தாயொரு முற்றானது தித்தே – வளமொன்றே
கொப்பூழொரு சிற்றாருயிர் கொத்தாகியு தித்தே
கைப்பாடுறு மக்கூழது துப்பாமமிழ் தத்தேன்
எப்பாலினும் தப்பாதினி தப்பாலது முப்பால் - எனநிற்போம்
Jun 19, 2022
வண்ணக்கலித்துறை
தன்னன தானா தய்யன தானா தந்தானா
இன்னமு தாமே இல்லவ ளாலே என்பேனே
அன்னமு மாமே அல்லியு மாமே அன்போடே
பொன்னென வாமே புல்லுவ ளாமே பொங்காதே
சொன்னவை தாமே பொய்யவை வேறோ சிந்தாதே
இன்னமு தாமே இல்லவ ளாலே என்பேனே
அன்னமு மாமே அல்லியு மாமே அன்போடே
பொன்னென வாமே புல்லுவ ளாமே பொங்காதே
சொன்னவை தாமே பொய்யவை வேறோ சிந்தாதே
Labels:
கவிதை
வண்ணப்பா
தத்தத் தனதனந் தனனா
தத்தத் தனதனந் தனனா
தத்தத் தனதனந் தனனா - தனதானா
முக்கட் பரமனின் றுணையே
முத்தத் தகைமுகந் தயவே
முற்றுப் பெறுமனந் தருவாய் - அருள்வாயே!
மொட்டுச் சிறைவிரிந் தவனாய்
மட்டற் றுளமகிழ்ந் திடவே
முத்துத் தமிழனிங் குறவே - பணிவேனே
மக்கட் பெருமையங் கயலே
மச்சக் குலம்வளர்ந் தனையே
மக்கட் குறைகளைந் தருளே – மலையாளே
வற்றிப் பசியெனுந் துயரார்
வக்கற் றுனையெணுங் குரலார்
வட்டிற் சுவையடங் குணவால் - ஒளியாவாய்
விக்கித் தழுவர்தங் குறையோ
விட்டுப் புலமறந் துறைவாம்
விட்டுச் செலவருந் துறையாய் - இயல்வாயே
மெட்டுக் கொருபெருங் கவிதா
மெச்சித் தலைவணங் கினனே
வெற்றிக் கனிமகிழ்ந் தருளே - பெருந்தாயே!
திக்கற் றயலரென் றியலா(து)
இக்கட் டினிலுழன் றவரோ
திக்கித் திரிதலுண் டினியோ - அருளாலே
சிக்குத் துயரமுந் துடையேன்
தித்தித் தெவருமிங் கினிதே
சித்திக் கிறவருந் தவமே - உறுவாரே
தத்தத் தனதனந் தனனா
தத்தத் தனதனந் தனனா - தனதானா
முக்கட் பரமனின் றுணையே
முத்தத் தகைமுகந் தயவே
முற்றுப் பெறுமனந் தருவாய் - அருள்வாயே!
மொட்டுச் சிறைவிரிந் தவனாய்
மட்டற் றுளமகிழ்ந் திடவே
முத்துத் தமிழனிங் குறவே - பணிவேனே
மக்கட் பெருமையங் கயலே
மச்சக் குலம்வளர்ந் தனையே
மக்கட் குறைகளைந் தருளே – மலையாளே
வற்றிப் பசியெனுந் துயரார்
வக்கற் றுனையெணுங் குரலார்
வட்டிற் சுவையடங் குணவால் - ஒளியாவாய்
விக்கித் தழுவர்தங் குறையோ
விட்டுப் புலமறந் துறைவாம்
விட்டுச் செலவருந் துறையாய் - இயல்வாயே
மெட்டுக் கொருபெருங் கவிதா
மெச்சித் தலைவணங் கினனே
வெற்றிக் கனிமகிழ்ந் தருளே - பெருந்தாயே!
திக்கற் றயலரென் றியலா(து)
இக்கட் டினிலுழன் றவரோ
திக்கித் திரிதலுண் டினியோ - அருளாலே
சிக்குத் துயரமுந் துடையேன்
தித்தித் தெவருமிங் கினிதே
சித்திக் கிறவருந் தவமே - உறுவாரே
Labels:
கவிதை
வண்ண எண்சீர்விருத்தம்
தத்தத்தன தத்தத்தன தத்தத் தத்தா
வெற்றிக்கொடி கட்டிப்பறை கொட்டிப் பொற்றேர்
வெப்பக்களம் நிற்கத்தலை யற்றுப் பட்டேம்
பற்றுக்கொடி யற்றுச்சித றித்திக் கெட்டே
பக்கத்துணை முற்றத்தழி வுற்றுக் கெட்டேம்
எற்றுக்கினி மிச்சத்துயிர் துச்சத் துக்கே
எற்றைக்கொரு வெற்றிக்கொடி நட்டுச் செற்றே
வெற்றிக்கனி பற்றிப்பெரு மித்துச் செப்பேம்?
வெட்சித்திணை உச்சத்தினை மெச்சிக் கொட்டே!
வெற்றிக்கொடி கட்டிப்பறை கொட்டிப் பொற்றேர்
வெப்பக்களம் நிற்கத்தலை யற்றுப் பட்டேம்
பற்றுக்கொடி யற்றுச்சித றித்திக் கெட்டே
பக்கத்துணை முற்றத்தழி வுற்றுக் கெட்டேம்
எற்றுக்கினி மிச்சத்துயிர் துச்சத் துக்கே
எற்றைக்கொரு வெற்றிக்கொடி நட்டுச் செற்றே
வெற்றிக்கனி பற்றிப்பெரு மித்துச் செப்பேம்?
வெட்சித்திணை உச்சத்தினை மெச்சிக் கொட்டே!
Labels:
கவிதை
வண்ணப்பா
தனன தனன தனன தனன
தனன தனன தனன தனன
தனன தனன தனன தனன. - தனதனா
முருக முதல முகிழு மொளிய
அருளும் அறுமு கமுள பெரும
முறுவ லுடனொ ருபடை யலொடு - வருவனே
முழுது முணர யுகமு முடியும்
அருமை பெருமை அகமும் அறியும்
முருகு முருகெ னவுரை உளமும் - உருகுமே
வருக வருக மயிலில் வருக
தருக அருளை மழைமு கிலென
வரம தருள மலரும் மனமும் - மகிழுமே
வரத ரருள வகைவ கையென
வடிவ முடைய கவிதை வருதல்
வரமெ னவுரை செயலும் உனது - கருணையே
ஒருமை யுடைய தனிமை நெறிய!
இருமை யுடைய பெருமை யுடைய!
மறுமை யிலுமுன் அடியன் எனவும் - அருளுமே
உலக உவகை உனது கதிரில்!
ஒளிரு மழகை உதடு பகரும்!
உரிமை யுறவ! உமையி னுயிர! - பனிவனே!
அருவி வழியும் நறிய பொழிலும்
மறையை மொழிய உரிய இடமும்
அலையு முகமும் அரிய மலையும் - உரியனே
அரிய பெரிய செழிய தமிழை
அகில முணரு முதலு மொழியை
அகம துணர மகிழ மகிழ - உடையனே
தனன தனன தனன தனன
தனன தனன தனன தனன. - தனதனா
முருக முதல முகிழு மொளிய
அருளும் அறுமு கமுள பெரும
முறுவ லுடனொ ருபடை யலொடு - வருவனே
முழுது முணர யுகமு முடியும்
அருமை பெருமை அகமும் அறியும்
முருகு முருகெ னவுரை உளமும் - உருகுமே
வருக வருக மயிலில் வருக
தருக அருளை மழைமு கிலென
வரம தருள மலரும் மனமும் - மகிழுமே
வரத ரருள வகைவ கையென
வடிவ முடைய கவிதை வருதல்
வரமெ னவுரை செயலும் உனது - கருணையே
ஒருமை யுடைய தனிமை நெறிய!
இருமை யுடைய பெருமை யுடைய!
மறுமை யிலுமுன் அடியன் எனவும் - அருளுமே
உலக உவகை உனது கதிரில்!
ஒளிரு மழகை உதடு பகரும்!
உரிமை யுறவ! உமையி னுயிர! - பனிவனே!
அருவி வழியும் நறிய பொழிலும்
மறையை மொழிய உரிய இடமும்
அலையு முகமும் அரிய மலையும் - உரியனே
அரிய பெரிய செழிய தமிழை
அகில முணரு முதலு மொழியை
அகம துணர மகிழ மகிழ - உடையனே
Labels:
கவிதை
வண்ண நேரிசை வெண்பா
பைந்தமிழ்ச்சோலைத் தேர்வுத்தாள் வினா:
தத்ததன என்ற சந்தத்தில் ....ஈற்றசை தத்து என்ற சந்தத்தில் முடிய வண்ண நேரிசை வெண்பா எழுதுக.
------------------
முற்றறிவு பெற்றவரை முத்திபெறு சித்த(ர்)தமை
முற்றுமுண(ர்) முத்தமிழ வித்தகரை - வெற்றிகொள
வெட்சியணி நெற்றியுள கொற்றவனு(ம்) உச்சியென
மெச்சியணி வைத்திடுவ(ர்) முத்து
தத்ததன என்ற சந்தத்தில் ....ஈற்றசை தத்து என்ற சந்தத்தில் முடிய வண்ண நேரிசை வெண்பா எழுதுக.
------------------
முற்றறிவு பெற்றவரை முத்திபெறு சித்த(ர்)தமை
முற்றுமுண(ர்) முத்தமிழ வித்தகரை - வெற்றிகொள
வெட்சியணி நெற்றியுள கொற்றவனு(ம்) உச்சியென
மெச்சியணி வைத்திடுவ(ர்) முத்து
Labels:
கவிதை
வண்ணப்பா
பைந்தமிழ்ச்சோலைத் தேர்வுத்தாள் வினா:
பின்வரும் ஒருகலையைக் காண்க. அதனடிப்படையில் சந்தக்குழிப்பைக் கண்டறிந்து, கொடுக்கப்பட்ட ஒரு கலையை எங்காவது பயன்படுத்தி முழுமையான வண்ணப்பா எழுதுக.
இருவிழியு மூடாம லெனதுமன மாடாம
லிருமனமு மோயாது --- பூமானே
------------------
தனனதன தானான தனனதன தானான
தனனதன தானான – தானானா
இருவிழியு மூடாம லெனதுமன மாடாம
லிருமனமு மோயாது - பூமானே
இதயமுழு தாளாம லினியவிசை கேளாம
லிருமைநிலை மாறாம - லோடாதே
ஒருவழியும் பாராம லொருமைநிலை நீடாம
லுணருமொழி யோராமல் - வாழ்வேனோ
ஒருதலைய தாகாது பசலையுறல் வீணாகும்
உணர்வழிய லாகாது - தேமாவே
பெருமையொடு வாழாது பிழையைமனம் போறாது
பிரிவுநிலை யாகாது - வானேறும்
பிறவிநிலை நீடாது பிறழலுற வீடேது
பிரியமுள னேநீயும் - போகாதே
உருவழியும் ஊனாக உருகுமெழு காயாக
உதறிவிட லாகாது – வாவாவா
உலகமதில் வீணாக ஒருபொழுதும் போகாமல்
உறவுமுறை வீடாது - சேர்வோமே
பின்வரும் ஒருகலையைக் காண்க. அதனடிப்படையில் சந்தக்குழிப்பைக் கண்டறிந்து, கொடுக்கப்பட்ட ஒரு கலையை எங்காவது பயன்படுத்தி முழுமையான வண்ணப்பா எழுதுக.
இருவிழியு மூடாம லெனதுமன மாடாம
லிருமனமு மோயாது --- பூமானே
------------------
தனனதன தானான தனனதன தானான
தனனதன தானான – தானானா
இருவிழியு மூடாம லெனதுமன மாடாம
லிருமனமு மோயாது - பூமானே
இதயமுழு தாளாம லினியவிசை கேளாம
லிருமைநிலை மாறாம - லோடாதே
ஒருவழியும் பாராம லொருமைநிலை நீடாம
லுணருமொழி யோராமல் - வாழ்வேனோ
ஒருதலைய தாகாது பசலையுறல் வீணாகும்
உணர்வழிய லாகாது - தேமாவே
பெருமையொடு வாழாது பிழையைமனம் போறாது
பிரிவுநிலை யாகாது - வானேறும்
பிறவிநிலை நீடாது பிறழலுற வீடேது
பிரியமுள னேநீயும் - போகாதே
உருவழியும் ஊனாக உருகுமெழு காயாக
உதறிவிட லாகாது – வாவாவா
உலகமதில் வீணாக ஒருபொழுதும் போகாமல்
உறவுமுறை வீடாது - சேர்வோமே
Labels:
கவிதை
வண்ணப்பா
பைந்தமிழ்ச்சோலைத் தேர்வுத்தாள் வினா:
தத்ததனத் தானதன தத்ததனத் தானதான
தத்ததனத் தானதனத் - தானா தானா
கிட்டுவதற் கோவெளிது திட்டமுடைத் தானதது
கெட்டததைக் காணுவதற் - கேயே தேதோ?
கெட்டுவிடப் போகுதுடல் விட்டுவிடப் போகுதுயிர்
கெட்டமனத்(து) ஆசையதற் - காளா காதே
குட்டிவிடப் பேருமிலை குற்றமுடைத் தானதிலை
குற்றுயிருக் கானமனத் - தாளா யாரோ
குற்றமெனக் கோடுதலை நெற்றியினிற் சேரவிடு
குற்றமொழித் தோருதலைக் - காணே நீயே
கட்டுமனத் தேயுனது கட்டளையைத் தாவலிலை
கட்டுமனைக் காரியுளத் - தேதாம் வாழ்வே
கற்றநெறிக் காலுறைக குற்றமறுப் பானுயர்வு
கற்றதனுக் கானமலைத் - தேனாம் வானாம்
தட்டுமனக் காமமது பட்டவலைத் தீமையவை
தட்டிவிடச் சேருவதைக் - கேளாய் நீயே
தக்கநிலைப் பாழுமது சச்சரவைத் தாருமது
சற்றுநினைப் போடதனைத் - தேராய் வாயே
பின்வரும் ஒருகலையைக் காண்க. அதனடிப்படையில் சந்தக்குழிப்பைக் கண்டறிந்து, கொடுக்கப்பட்ட ஒரு கலையை எங்காவது பயன்படுத்தி முழுமையான எழுதுக.
கெட்டுவிடப் போகுதுடல் விட்டுவிடப் போகுதுயிர்
கெட்டமனத் தாசையதற் - காளா காதே
-----------------------
கெட்டுவிடப் போகுதுடல் விட்டுவிடப் போகுதுயிர்
கெட்டமனத் தாசையதற் - காளா காதே
-----------------------
தத்ததனத் தானதன தத்ததனத் தானதான
தத்ததனத் தானதனத் - தானா தானா
கிட்டுவதற் கோவெளிது திட்டமுடைத் தானதது
கெட்டததைக் காணுவதற் - கேயே தேதோ?
கெட்டுவிடப் போகுதுடல் விட்டுவிடப் போகுதுயிர்
கெட்டமனத்(து) ஆசையதற் - காளா காதே
குட்டிவிடப் பேருமிலை குற்றமுடைத் தானதிலை
குற்றுயிருக் கானமனத் - தாளா யாரோ
குற்றமெனக் கோடுதலை நெற்றியினிற் சேரவிடு
குற்றமொழித் தோருதலைக் - காணே நீயே
கட்டுமனத் தேயுனது கட்டளையைத் தாவலிலை
கட்டுமனைக் காரியுளத் - தேதாம் வாழ்வே
கற்றநெறிக் காலுறைக குற்றமறுப் பானுயர்வு
கற்றதனுக் கானமலைத் - தேனாம் வானாம்
தட்டுமனக் காமமது பட்டவலைத் தீமையவை
தட்டிவிடச் சேருவதைக் - கேளாய் நீயே
தக்கநிலைப் பாழுமது சச்சரவைத் தாருமது
சற்றுநினைப் போடதனைத் - தேராய் வாயே
Labels:
கவிதை
Jun 6, 2022
தத்துவோம் - 4
தத்துவோம் 001:
சில நேரங்களில் பெருமையை நிலைநாட்ட எருமையை மேய்க்க வேண்டியிருக்கிறது.
தத்துவோம் 002:
மனிதனின் இயல்பான குணங்களுள் ஒன்று பொறாமை (பொறுக்க முடியாமை). பொறாமையை மறந்து செய்யத் தகுந்தன செய்யின் வெற்றியே! பொறாமல் செய்யத் தகாதன செய்யின் அழிவே!
தத்துவோம் 003:
உலகில் மகான்களைவிடத் தன்னை மகானாக நினைத்துக் கொள்வோர் பலருண்டு.
தத்துவோம் 004:
பொய்யா உண்மையா என்று கேட்கும் காலத்திலன்றி
நம்பிக்கையா உண்மையா என்று கேட்கும் காலத்திலா வாழ்கிறோம்?
Labels:
உரைநடை
Jun 3, 2022
ஊக்குவோம் (அறுசீர் விருத்தம்)
எத்தனை தடைகள் வந்தாலும்
எடுத்தெறிந் தின்னும் தொட்டுப்போ
சித்தனைப் போலே சிந்தனையைச்
செவ்விய ஒன்றில் செலுத்திப்பார்
முத்தெனத் திறமை வெளிப்பட்டு
முழுமையைப் பெறுவாய் முகமலர்வாய்
வித்தென வேகம் விளையட்டும்
வினைகளைந் தின்பம் பெருகட்டும்
Labels:
கவிதை
Subscribe to:
Posts (Atom)