அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Aug 4, 2017
இவ்வுல கென்றும் இனிமையதே!
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
என்னாற் பட்ட துயரெல்லாம்
இன்றோ டொழிக! இன்முகமே
எந்நா ளும்நான் கண்டிங்கு
வின்பம் காண மலர்முகமே!
கன்னல் கண்ணன் கனிமுகம்போல்
கவின்பெற் றுயரினி மைபெறுக
இன்னல் இனிநான் காணேனே!
இவ்வுல கென்றும் இனிமையதே!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)