நேரில் நிகழ்வதைக் கண்ணுற் றவரையே
சாருமாம் நீதிமன்றம் தக்கதாய் - ஓருவீர்
எப்புலன் தன்னிலும் என்னையே சால்பென்பீர்
இப்பொழு தாயினும் ஏற்று (91)
கட்டளைக் கலித்துறை
ஏற்ற பணியை இடையே யிலாமல் இயற்றிடுவேன்
ஊற்றம் உடைய உடலை ஒருவா றியக்கிடுவேன்
சீற்றம் படைத்திடும் தும்மலில் நாற்புலன் சீர்நடுங்கும்
ஆற்றல், இயக்கல், அதிர்த்தலில் நானோர் அரசெனவே (92)
அகவல்
அரசும் ஆண்டியும் அவனவன் வாயின்
முரசம் சொல்லும் முறைமை யாலே
வாய்தவங் கொள்ள வாய்த்தவை வெல்லும்
நோய்தவங் கொள்ளும் நொய்ந்த சொல்லால்
வாய்மையும் தூய்மையும் வழியாய்
வாய்கொள வாழ்வு வான்புகழ் பெறுமே (93)
விருத்தம்
பெற்றவர் தங்கள் பிள்ளைகள் எல்லாம்
பெருமையு றுவதை மெச்சுதற்போல்
மற்றநற் புலன்காள் மழலையில் நீங்கள்
வழங்கிடும் மொழியில் மகிழ்கின்றேன்!
குற்றமொன் றோரேன்! குறையெதுங் காணேன்!
குழந்தைகள் கொள்ளும் சீரெல்லாம்
உற்றிடு மென்னை யெனவுணர்ந் தேனே!
உயர்வினி லிறும்பூ தெய்துகிறேன்! (94)
வண்ண விருத்தம்
தனதன தனந்த தனதானா
தனதன தனந்த தனதானா
உயர்வினில் மயங்கு முளமாவேன்
ஒலியொடு விளங்கு பொறியாவேன்
தயவொடு புரிந்த பணியாலே
தமிழொடு நனைந்த வரமாவேன்
பயனுற விளைந்த இசையாலே
பசிதனை மறந்த தவமானேன்
அயர்வற நினைந்து நாடோறும்
அமுதினை வழங்க யிணைவேனே! (95)
வெண்பா
ஏற்றுக்கொள் கின்றேன் எனைப்போல் பிறபுலனும்
மாற்றுக் குறையா வகையென்றே - சாற்றுங்கால்
எல்லாப் புலனும் இறைவன் கொடுத்ததே
எல்லாம் மதிப்புடைத் தே (96)
கட்டளைக் கலித்துறை
தேவன் படைத்தான் தெளிவு கொடுத்தான் திறன்கொடுத்தான்
ஆவல் அமைத்தான் அடக்கும் வழிகளும் ஆங்குரைத்தான்
மூவல் தவிர்த்தொரு முக்தியைச் சேர்க்க முடிந்தமட்டும்
தாவல் அறுப்போம் சமமெனச் சேர்வோம் தரமுணர்ந்தே (97)
அகவல்
உணர்வி லோங்கி உடலும் உளமும்
புணரும் வாழ்வே பொன்வாழ் வாகும்
புலன்கள் யாவும் புணர்ந்த உணர்வால்
நலங்காண் உயிரே நனியினிது வாழும்
ஒவ்வொரு புலனும் ஒன்றிய திறனால்
செவ்வை யாகச் செய்பணி
இவ்வுல கேத்தும் இன்பமே இன்பமே (98l
விருத்தம்
இன்பத் திற்கே ஐம்புலனும்!
இன்பந் தானே இவ்வியற்கை!
இன்பத் திற்கே இப்புவியும்!
இன்பத் தேட்டம் இயல்பாகும்!
இன்பஞ் சிறிதில் ஏறிடுவோம்!
இன்பம் பெரிதை எண்ணிடுவோம்!
இன்பே எங்கள் ஐவரையும்
இணைக்கும் தமிழின் இன்னொருபேர்! (99)
வண்ண விருத்தம்
தனனா தந்தனன தந்தா
தனனா தந்தனன தந்தா
தனனா தந்தனன தந்தா தனதானா
இணைவோ மைம்பொறிக ளொன்றாய்
மகிழ்வா யன்பொடுக லந்தே
எவரோ டும்பகைமை யின்றே உறவானோம்
இறையோ னின்கருணை யொன்றால்
வளமா கும்பணியும் நன்றே
இனியே துந்தடைகள் வந்தா லுடனோடும்
வளமா கும்பணியும் நன்றே
இனியே துந்தடைகள் வந்தா லுடனோடும்
துணிவாய் நம்கடமை யொன்றே
பெரிதாய் நெஞ்சுறுதி கொண்டே
தொடர்வோ மின்ப(ம்)வரு மென்றே நகையோடே
துணையா குந்தமிழ்வி ருந்தால்
மனமோ பண்புடனெ ழுந்தே
சுகரா கந்தனில்மி தந்தே களிகூர
பெரிதாய் நெஞ்சுறுதி கொண்டே
தொடர்வோ மின்ப(ம்)வரு மென்றே நகையோடே
துணையா குந்தமிழ்வி ருந்தால்
மனமோ பண்புடனெ ழுந்தே
சுகரா கந்தனில்மி தந்தே களிகூர
அணியா யொன்றிணைய நம்போ
லினியோ ரிங்கெவரு முண்டோ
அழகாய் நம்பணியில் நன்றே விளையாதோ
அடடா நம்பெருமை கண்டே
அதனா லின்பமது கொண்டே
அமுதூ றுங்கவியை யின்றே வனைவாரே
உணவே கொஞ்சுதமி ழென்றே
நினைவால் நம்பும்நமை வென்றே
உயிரோ யெங்குசெலு மென்றே புரியீரோ
உணர்வா லிங்கிதைய றிந்தே
செவியான் மன்றினிலு வந்தே
ஒலியால் நன்றியினை யின்றே பொழிவேனே ! (100)
லினியோ ரிங்கெவரு முண்டோ
அழகாய் நம்பணியில் நன்றே விளையாதோ
அடடா நம்பெருமை கண்டே
அதனா லின்பமது கொண்டே
அமுதூ றுங்கவியை யின்றே வனைவாரே
உணவே கொஞ்சுதமி ழென்றே
நினைவால் நம்பும்நமை வென்றே
உயிரோ யெங்குசெலு மென்றே புரியீரோ
உணர்வா லிங்கிதைய றிந்தே
செவியான் மன்றினிலு வந்தே
ஒலியால் நன்றியினை யின்றே பொழிவேனே ! (100)