பேசுவதும் எழுதுவதும் தமிழென் றாலும்
பெயரினிலே தமிழில்லை இலக்க ணந்தான்
பேசுவதே இல்லையில்லை பின்னர் எங்கே
பெயரினிலே தமிழில்லை இலக்க ணந்தான்
பேசுவதே இல்லையில்லை பின்னர் எங்கே
பெருமைமிகு தமிழுக்குத் தொண்டு செய்வான்
ஆசுகவி வீசுகவி ஆயி ரந்தான்
அடுக்கடுக்காய்ப் பட்டங்கள் சுமந்த போதும்
வீசுமணம் பிறமொழியின் தாக்கத் தாலே
வீணாகிப் போய்விடுமே எண்ணிப் பாரீர்
பிறமொழிச்சொல் புகும்போது தமிழில் ஓசை
பிறழாமல் காப்பதுநம் கடமை யன்றோ
பிறழாமல் காப்பதுநம் கடமை யன்றோ
பிறமொழிச்சொல் பிறமொழிச்சொல் போதும் போதும்
பிறந்தமொழி அழிக்காமல் காப்பீர் அந்தோ!
அறமின்றி அவைபுகழைக் கூட்டும் என்பான்
அழிக்கின்ற செயலினையே நாளும் செய்வான்
உறுதமிழின் உருவத்தை மறைத்து நிற்கும்
உணர்வற்ற பிறமொழிச்சொல் களைந்து காணீர்