முத்தங் கொடுத்தே முறைக்கும் சினமாற்றும்
முத்துச் சிரிப்பின் முதல்வனே - வித்தகனாய்
விந்தை மிகச்செய்யும் வேறு படுத்துமொரு
சிந்தைக் கதிர்வேல னே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி
Jun 30, 2023
வானீய மேலெழுந்து வா
விரும்பியன விட்டொழித்து வேறுசெயப் புக்கின்
பொருந்தாது போமன்றே பொய்யாய் - வருந்தாது
தேனீயின் வாய்ப்புக வாழ்க்கை வருந்தாது
வானீய மேலெழுந்து வா
- தமிழகழ்வன்
பொருந்தாது போமன்றே பொய்யாய் - வருந்தாது
தேனீயின் வாய்ப்புக வாழ்க்கை வருந்தாது
வானீய மேலெழுந்து வா
- தமிழகழ்வன்
Labels:
கவிதை
Jun 29, 2023
கடனில் மூழ்கி...
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் மலரும் உள்ளம் என்னும் நூலில் சட்டை போட்ட குரங்கு என்னும் தலைப்பில் அமைந்த பாடலைப் படித்தபின் எழுதியது
இந்தக் குரங்கைப் போலவே
இற்றை மனிதர் வாழ்விலேகந்து வட்டிக் கடனிலும்
கலக்க மூட்டும் கடனிலும்
மூழ்கிச் சிக்கித் தவிக்கிறார்
மூளை யின்றித் திரிகிறார்
பாழ்கி ணற்றைப் பார்க்கிறார்
பாதை மாறித் திரிகிறார்
- தமிழகழ்வன்
Labels:
கவிதை
Jun 14, 2023
ஓயாத சிந்தனைகள்
உள்ளுக்குள் ஓராயிரம்
ஓயாத சிந்தனைகள்
பாடாய்ப் படுத்தும்
நாட்டையா பிடிக்கப் போகிறேன்?
நாடகத்திலா நடிக்கப் போகிறேன்?
வேட்டைக்கா போகிறேன்?
வேதனையிலா வாடுகிறேன்?
இல்லை இல்லை எதுவும் இல்லை
ஓயாத சிந்தனைகள்
பாடாய்ப் படுத்தும்
நாட்டையா பிடிக்கப் போகிறேன்?
நாடகத்திலா நடிக்கப் போகிறேன்?
வேட்டைக்கா போகிறேன்?
வேதனையிலா வாடுகிறேன்?
இல்லை இல்லை எதுவும் இல்லை
எதுவு மில்லாத இந்த மனந்தான்
இத்துணைப் பாடு படுகிறது.
இத்துணைப் பாடு படுகிறது.
Labels:
வசன கவிதை
Subscribe to:
Posts (Atom)