நெஞ்சைப் பிழியும் நேயக் காரியே
மஞ்சள் பூசிய மாயக் காரியே
செஞ்சவளே செஞ்சவளே
சிவந்த கண்களால் செஞ்சவளே
மல்லிப் பூவின் வாசம்
மனத்தைப் மயக்கிப் பேசும்
சொல்லிச் சென்றாயே
சோகம் வென்றாயே
என்ன நினைப்போ
எப்படி நான் அறிவேன்
வண்ணச் சிலையே
வடிப்பவன் வந்தேனே
இருளான என்றன் நெஞ்சம்
பொருளான வெளிச்சம் கொஞ்சம்
மருளாதே மருளாதே
மாற்றிப் பேரொளி தருவாயே
முத்துமணியே முத்துமணியே
சற்று தணியே சற்று தணியே
கற்றுத் தருவாய் கற்றுத் தருவாய்
கனியக் கனியக் கற்றுத் தருவாய்
இன்னதென்று சொல்லாமல்
என்னவென்று அறிவேனோ
என்னை வென்ற உன்மொழியில்
என்னை மறந்து தவிப்பேனே
காலம் மாறும் கருத்துகள் மாறும்
காதல் மட்டும் மாறாது
வேதனை வேண்டாமே
போதனை ஏன்தானோ?
Jan 30, 2023
Jan 11, 2023
நண்பன் புகழேந்தி - பிறந்தநாள் வாழ்த்து
விரும்பிய யாவும் பெற்று
விளக்கென விளங்குங் கோவாம்
கரும்பெனப் பேச்சில் நின்று
கவியென விளங்கும் பேரான்
பெரும்படை வந்த போதும்
பேறெனும் பொறுமை காத்துச்
சுரும்பெனச் சுறுசுறுப்பாய்ச்
சுழற்றுவான் மட்டைப் பந்தே
விளக்கென விளங்குங் கோவாம்
கரும்பெனப் பேச்சில் நின்று
கவியென விளங்கும் பேரான்
பெரும்படை வந்த போதும்
பேறெனும் பொறுமை காத்துச்
சுரும்பெனச் சுறுசுறுப்பாய்ச்
சுழற்றுவான் மட்டைப் பந்தே
Labels:
கவிதை
கிள்ளி எறிவோம்
அள்ளி விடுதற்கோர் அளவில்லை வாய்வந்த
கள்ளச் சேதியெலாம் கணக்காக வடிவமைப்பார்
எள்ளி நகையாட ஏற்றமணிக் கருத்துகளைக்
கிள்ளி எறிவோமிக் கீழ்மையை அகற்றுதற்கே
கள்ளச் சேதியெலாம் கணக்காக வடிவமைப்பார்
எள்ளி நகையாட ஏற்றமணிக் கருத்துகளைக்
கிள்ளி எறிவோமிக் கீழ்மையை அகற்றுதற்கே
Labels:
கவிதை
Jan 10, 2023
மொழிபெயர்ப்பு
காணவில்லை மாயமானாரே
நம்ம சிவா கைலாச ஊரு சென்றாரே
கொடுப்பதைக் கொடுங்கள்
விடுவதை விடுங்கள்
கையைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாரே (காணவில்லை)
ஆகாயம் மேலே இட்டாரே
நம்ம சிவா
பாதாளம் கீழே விட்டாரே
நடுவில் இந்த பூமியை
தோணிபோல மிதக்கவிட்டாரே (காணவில்லை)
காண தந்த மாய வாதனு (கன்னடப் பாடல்)
Labels:
மொழிபெயர்ப்பு
Subscribe to:
Posts (Atom)