Jan 30, 2023

நேயக்காரி

நெஞ்சைப் பிழியும் நேயக் காரியே
மஞ்சள் பூசிய மாயக் காரியே

செஞ்சவளே செஞ்சவளே
சிவந்த கண்களால் செஞ்சவளே

மல்லிப் பூவின் வாசம்
மனத்தைப் மயக்கிப் பேசும்
சொல்லிச் சென்றாயே
சோகம் வென்றாயே

என்ன நினைப்போ
எப்படி நான் அறிவேன்
வண்ணச் சிலையே
வடிப்பவன் வந்தேனே

இருளான என்றன் நெஞ்சம்
பொருளான வெளிச்சம் கொஞ்சம்
மருளாதே மருளாதே
மாற்றிப் பேரொளி தருவாயே

முத்துமணியே முத்துமணியே
சற்று தணியே சற்று தணியே

கற்றுத் தருவாய் கற்றுத் தருவாய்
கனியக் கனியக் கற்றுத் தருவாய்

இன்னதென்று சொல்லாமல்
என்னவென்று அறிவேனோ
என்னை வென்ற உன்மொழியில்
என்னை மறந்து தவிப்பேனே

காலம் மாறும் கருத்துகள் மாறும்
காதல் மட்டும் மாறாது
வேதனை வேண்டாமே
போதனை ஏன்தானோ?

No comments:

Post a Comment