சிறந்தன யாவும் சிந்தையில் எண்ணிச்
சிறகடிக்க வைத்துச் செழுமையை ஊட்டும்
திறமுடை யப்பனே! தெய்வம் போலவே
அறம்பொருள் நல்கி அகிலம் ஆனாய்!
உலகம் அறியா உணர்வுடை யவன்நான்
உன்னை விடவும் உயர்ந்து வளர
உலகம் உணர்த்தி உலகம் ஆனாய்!
Jun 23, 2021
Jun 13, 2021
மணிக்குறள் - 50. முப்பாலைப் போற்று
அருந்தமிழ் சொன்ன இலக்கணங் கட்குப்
பொருந்துநற் காட்டாங் குறள் 491
வாழ்க்கை முறையை வளமாய் நிறுத்தலான்
தாழ்வைத் தடுக்கும் மருந்து 492
நிலைதவறிப் போனாரை நின்றுதடுத் தாண்டு
மலையாக்கும் மாண்பை உடைத்து 493
குறளடி யாலே குவலயம் ஆண்ட
அறம்பொருள் இன்பம் அது 494
ஒருபொருண்மேற் பத்தடுக்கி ஒவ்வொன்றும் முத்தாய்ப்
பொருள்பொதிந் தாக்கினார் போற்று 495
எக்காலத் திற்கும் இனிதாய்ப் பொருந்துவழி
அக்காலத் தேவகுத்தார் ஆண்டு 496
காலங் கருதி இடத்தாற் செயச்சொல்லிப்
பாலம் அமைத்தார் படிக்கு 497
ஐயனே! ஆற்றல் அளிக்கும் திருக்குறளை
உய்யவே தந்தாய் உலகு 498
துணைநின்று தாங்கும் சுடர்விளக்கின் கோலாய்
இணைத்தாய் இனியமுப் பால் 499
சொல்லாக் கருத்துண்டோ? சொல்லிற் சுடரேற்றி
வெல்லக் கொடுத்தாய் விருந்து 500
பொருந்துநற் காட்டாங் குறள் 491
வாழ்க்கை முறையை வளமாய் நிறுத்தலான்
தாழ்வைத் தடுக்கும் மருந்து 492
நிலைதவறிப் போனாரை நின்றுதடுத் தாண்டு
மலையாக்கும் மாண்பை உடைத்து 493
குறளடி யாலே குவலயம் ஆண்ட
அறம்பொருள் இன்பம் அது 494
ஒருபொருண்மேற் பத்தடுக்கி ஒவ்வொன்றும் முத்தாய்ப்
பொருள்பொதிந் தாக்கினார் போற்று 495
எக்காலத் திற்கும் இனிதாய்ப் பொருந்துவழி
அக்காலத் தேவகுத்தார் ஆண்டு 496
காலங் கருதி இடத்தாற் செயச்சொல்லிப்
பாலம் அமைத்தார் படிக்கு 497
ஐயனே! ஆற்றல் அளிக்கும் திருக்குறளை
உய்யவே தந்தாய் உலகு 498
துணைநின்று தாங்கும் சுடர்விளக்கின் கோலாய்
இணைத்தாய் இனியமுப் பால் 499
சொல்லாக் கருத்துண்டோ? சொல்லிற் சுடரேற்றி
வெல்லக் கொடுத்தாய் விருந்து 500
Labels:
கவிதை - மணிக்குறள்
Jun 7, 2021
ஆறு முகனே வரந்தருமே!
ஆறு முகனே கொடுநுண்மி
ஆட்டம் அறுப்பாய் அகத்துக்குத்
தேறுதல் தருவாய் தெருளகற்றித்
தெளிந்து வினையை ஊக்குவிப்பாய்
மாறுதல் வேண்டும் மாயையிலே
மாட்டித் தவிக்கும் மக்கட்கு
வீறு கொண்டு விளையாட
வெற்றிக் கொடியோய் வரந்தருமே!
ஆட்டம் அறுப்பாய் அகத்துக்குத்
தேறுதல் தருவாய் தெருளகற்றித்
தெளிந்து வினையை ஊக்குவிப்பாய்
மாறுதல் வேண்டும் மாயையிலே
மாட்டித் தவிக்கும் மக்கட்கு
வீறு கொண்டு விளையாட
வெற்றிக் கொடியோய் வரந்தருமே!
Labels:
கவிதை
Jun 6, 2021
மணிக்குறள் - 49. வணிகத்தமிழ் வளர்ப்போம்
எண்ணம் சிறக்க எழிற்றாய் மொழிக்கல்வி
வண்ணம் பலவாக்கத் தேர் 481
தமிழ்வழிக் கல்வி தகுவழி ஆற்றும்
அமிழ்தாய் இனிக்கும் அறிவு 482
கல்வி யிலாது வணிகம் சிறக்காது
நல்வித் ததற்குத் தமிழ் 483
முத்தமி ழோடு முனைந்து வணிகமெனும்
அத்தமிழை ஆக்குவோம் ஆய்ந்து 484
அறிவியலை ஆக்குக அந்தமிழில் சிந்தை
செறிவாய் வளரும் சிறந்து 485
நிறுவனம் எல்லாம் நிலைகொள வேண்டும்
உறுதல் தமிழ்வழி என்று 486
அலுவல் மொழியாய் அருந்தமிழ் ஆக்கு
நிலைநன் னிறுவனம் நின்று 487
கலைகள் அறிவியல் காலக் கணினி
நிலைகொள் தமிழில் நிறுத்து 488
விண்ணொளிர் சோதிட வித்தைத் தமிழ்வழிக்
கண்ணொளியாய்க் கூட்டக் கனி 489
மென்பொருள் வன்பொருள் மேதினி காண்கின்ற
நுண்பொருள் நந்தமிழில் நூல் 490
வண்ணம் பலவாக்கத் தேர் 481
தமிழ்வழிக் கல்வி தகுவழி ஆற்றும்
அமிழ்தாய் இனிக்கும் அறிவு 482
கல்வி யிலாது வணிகம் சிறக்காது
நல்வித் ததற்குத் தமிழ் 483
முத்தமி ழோடு முனைந்து வணிகமெனும்
அத்தமிழை ஆக்குவோம் ஆய்ந்து 484
அறிவியலை ஆக்குக அந்தமிழில் சிந்தை
செறிவாய் வளரும் சிறந்து 485
நிறுவனம் எல்லாம் நிலைகொள வேண்டும்
உறுதல் தமிழ்வழி என்று 486
அலுவல் மொழியாய் அருந்தமிழ் ஆக்கு
நிலைநன் னிறுவனம் நின்று 487
கலைகள் அறிவியல் காலக் கணினி
நிலைகொள் தமிழில் நிறுத்து 488
விண்ணொளிர் சோதிட வித்தைத் தமிழ்வழிக்
கண்ணொளியாய்க் கூட்டக் கனி 489
மென்பொருள் வன்பொருள் மேதினி காண்கின்ற
நுண்பொருள் நந்தமிழில் நூல் 490
Labels:
கவிதை - மணிக்குறள்
Subscribe to:
Posts (Atom)