அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Jun 7, 2021
ஆறு முகனே வரந்தருமே!
ஆறு முகனே கொடுநுண்மி
ஆட்டம் அறுப்பாய் அகத்துக்குத்
தேறுதல் தருவாய் தெருளகற்றித்
தெளிந்து வினையை ஊக்குவிப்பாய்
மாறுதல் வேண்டும் மாயையிலே
மாட்டித் தவிக்கும் மக்கட்கு
வீறு கொண்டு விளையாட
வெற்றிக் கொடியோய் வரந்தருமே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment