நேரிசை வெண்பா
1. ஆற்றுப்படை
முதலைத் தருவான் முருகன்அம் மூவர்
1. ஆற்றுப்படை
முதலைத் தருவான் முருகன்அம் மூவர்
முதலுக் குரியன் முருகன் - முதற்கண்
நுதற்கண் ணுதித்தோன் நுதலைப் பதித்தோன்
நுதற்கண் ணிருத்தி நுவல்.
நாடி நரம்பெலாம் நங்குமரன் நாமங்கள்
நாடி விரைந்து நலம்பயக்கும் - நாடியே
தேடு பொருளெனும் தெள்ளறி வாளர்க்கு
நாடுபொருள் எல்லாம் நவில்
2. வாழ்த்து
குமரனே! ஞானக் குகனே! அடியார்
தமரனே! துன்பந்தீர்த் திட்ட - விமலனே!
வாழை தனிற்பந்தல் வாய்த்திடச் செய்தோனே!
வாழி!நீ நின்னடியன் வாழ்த்து
3. புகழ்
தேனாய தீந்தமிழின் தேவமக னேநீதான்
வானாகிக் காலாகி வையத்தார் - கோனே!
மனம்நிறைந்த மாணிக்க மே!மகிழ்வே! என்றே
மனம்பொருந்தக் கூறிடும் மான்
சுரபூ பதியேயென் றேத்துபுகழ் கொண்ட
சரவண னே!தமிழ்ச் சாறே! - அரவந்
தரித்த வரன்மைந் தனே!கூர் வடிவேல்
உரித்தாய் உடையவ னே!
விண்டவழ் மீனறுவர் ஊட்டமுதப் பாலகனே!
எண்டிசை போற்றிடும் எந்தையே! - தண்டமிழ்ச்
சொல்லாய் விளங்கிடுஞ் சோலையனே! நானிலத்தே
எல்லாய் இயங்குமிறை யோய்!
தன்னம்பிக் கையாயென் னெஞ்சுலவு நாதனவன்
தன்னவரைக் காக்கும் குகையாவான் - அன்னவன்
தான்குக னாவான் தரணியும் ஆவானே
வான்கூடத் தானே அவன்
4. வேண்டல்
முருகனே! கந்தனே! கார்மேக வண்ணன்
மருகனே! செந்தமிழ்ப் பாட்டுக்(கு) - உருகனே!
எந்தையே! நின்னருளை வேண்டுகிறேன் நல்லறிவுச்
சிந்தையை நீஎனக்குத் தா
செந்தூர் எழிற்குமரா! தேர்க நினதருளால்
கந்தா!கார் மேகத் தருளெனவே - எந்தம்
அகங்குளிர ஆற்றுக ஆற்றத் தகுந்த!
குக!குகை என்னைக்கா கா
திருமுருக! நின்னருளை என்னிழற்குச் சேர்க்க!
உருவதுவாய் அந்நிழலை மாற்றித் - திருக்கருணை
மாரி எமைச்சேர மாட்சிமை யோங்கிட
வாரீர் வளந்தரு வீர்
என்னிறைவா என்றழைத் துள்ளம் மகிழ்கின்றேன்
தன்னிறைவாம் செல்வத்தைப் பெற்றிடவே - முன்னின்று
வாழ்த்திடுவாய் வாழ்க்கை முறையில் வளம்மேலும்
சேர்த்திடுவாய் நின்னடி யில்.
உண்மைப் பெயருடையார் போலுடலுள் ளந்தருவாய்
அண்மை இருந்தெம்மை ஆட்கொள்வாய் - திண்ணமுடன்
கொண்ட செயல்முழுமைக் கோன்மை யுடனதனால்
கொண்டிடச் செய்குவை கோன்
- தமிழகழ்வன்
நுதற்கண் ணுதித்தோன் நுதலைப் பதித்தோன்
நுதற்கண் ணிருத்தி நுவல்.
நாடி நரம்பெலாம் நங்குமரன் நாமங்கள்
நாடி விரைந்து நலம்பயக்கும் - நாடியே
தேடு பொருளெனும் தெள்ளறி வாளர்க்கு
நாடுபொருள் எல்லாம் நவில்
குமரனே! ஞானக் குகனே! அடியார்
தமரனே! துன்பந்தீர்த் திட்ட - விமலனே!
வாழை தனிற்பந்தல் வாய்த்திடச் செய்தோனே!
வாழி!நீ நின்னடியன் வாழ்த்து
3. புகழ்
தேனாய தீந்தமிழின் தேவமக னேநீதான்
வானாகிக் காலாகி வையத்தார் - கோனே!
மனம்நிறைந்த மாணிக்க மே!மகிழ்வே! என்றே
மனம்பொருந்தக் கூறிடும் மான்
சுரபூ பதியேயென் றேத்துபுகழ் கொண்ட
சரவண னே!தமிழ்ச் சாறே! - அரவந்
தரித்த வரன்மைந் தனே!கூர் வடிவேல்
உரித்தாய் உடையவ னே!
விண்டவழ் மீனறுவர் ஊட்டமுதப் பாலகனே!
எண்டிசை போற்றிடும் எந்தையே! - தண்டமிழ்ச்
சொல்லாய் விளங்கிடுஞ் சோலையனே! நானிலத்தே
எல்லாய் இயங்குமிறை யோய்!
தன்னம்பிக் கையாயென் னெஞ்சுலவு நாதனவன்
தன்னவரைக் காக்கும் குகையாவான் - அன்னவன்
தான்குக னாவான் தரணியும் ஆவானே
வான்கூடத் தானே அவன்
4. வேண்டல்
முருகனே! கந்தனே! கார்மேக வண்ணன்
மருகனே! செந்தமிழ்ப் பாட்டுக்(கு) - உருகனே!
எந்தையே! நின்னருளை வேண்டுகிறேன் நல்லறிவுச்
சிந்தையை நீஎனக்குத் தா
கந்தா!கார் மேகத் தருளெனவே - எந்தம்
அகங்குளிர ஆற்றுக ஆற்றத் தகுந்த!
குக!குகை என்னைக்கா கா
திருமுருக! நின்னருளை என்னிழற்குச் சேர்க்க!
உருவதுவாய் அந்நிழலை மாற்றித் - திருக்கருணை
மாரி எமைச்சேர மாட்சிமை யோங்கிட
வாரீர் வளந்தரு வீர்
என்னிறைவா என்றழைத் துள்ளம் மகிழ்கின்றேன்
தன்னிறைவாம் செல்வத்தைப் பெற்றிடவே - முன்னின்று
வாழ்த்திடுவாய் வாழ்க்கை முறையில் வளம்மேலும்
சேர்த்திடுவாய் நின்னடி யில்.
உண்மைப் பெயருடையார் போலுடலுள் ளந்தருவாய்
அண்மை இருந்தெம்மை ஆட்கொள்வாய் - திண்ணமுடன்
கொண்ட செயல்முழுமைக் கோன்மை யுடனதனால்
கொண்டிடச் செய்குவை கோன்
- தமிழகழ்வன்