Oct 17, 2012

காயத்திரியின் கனியுள வேண்டல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மாயத் திரையில் மயங்கிடு முலகு
   முடிவுறுங் காலு மாறிலாச் சீரார்
மாய னுந்தி முண்டகத் துதித்த
   மன்னவ! யுகங்கள் எத்தனை கடந்தும்
ஆய கலைகள் அறுபதும் நான்கும்
   அந்தமி லொன்றாய் மன்றிட வேண்டும்
காயத் திரியின் கனியுள வேண்டல்
   கலைமக ளகத்தே சேர்த்திடு வாயே!
                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்