புலவர்: வணங்குகிறேன் நக்கீரரே!
நக்கீரர்: வருக புலவரே! வணங்குகிறேன். நலந்தானே!
புலவர்: வணங்குகிறேன் நக்கீரரே!
நக்கீரர்: வருக புலவரே! வணங்குகிறேன். நலந்தானே!
கதிர்வேலா செங்கதிர் வேலா
பொங்கும் கதிர்வேலா
ஆனந்தி பாலா அகழ்வன் தோளா
அந்தமிழ்க் கதிர்வேலா
சிந்தையினிக்கச் சிரிப்புக் காட்டும்
சின்ன கதிர்வேலா
தத்திநடை போட்டுப் போட்டுத்
தாவி ஏறும் பாலா
பின்னாலே கையைக் கட்டிப்
பிடித்தது கேட்கும் வேலா
கிள்ளைப் பிள்ளாய்
கிண்கிணி யாட்டச்
செல்லப் பிள்ளாய் நீயே
தாளம் போட ஆட்டம் போடும்
தங்க நட பாலா
பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி
தலையெழுத் தாவதென் றாலெழுத் தாவதென் றானீன்றதாங்
கலையெழுத் தாவதென் காலெழுத் தாவதென் கானீன்றதாம்
நிலையெழுத் தாவதென் நீளெழுத் தாவதென் நீயென்னுடைத்
தலையெழும் அல்லலைத் தாளிடு மல்லலைத் தாருமையே 21
தருகென்று வேண்டித் தமிழ்பாடி னேனைத் தரமுயர்த்தி
முருகா தலமென் முனைப்பை யளிப்பாய் முழுமுதலே
உருகா உயிரும் உலகினில் உண்டோ உனையகலேன்
பொருந்து மறிவால் புரிவன தந்தழி பொய்ம்மையையே 22
பொய்யா யுலகில் பொழுதினைப் போக்கும் பொருளெனவோ?
செய்யத் தகாதன செய்யத் துணிவார் செயல்களெலாம்
ஐயோ கொடுமை அறமிலச் செய்கை அழிதலுக்கே
ஐயா அருள்வேலா! ஆறுத லீவாய் அகத்தினுக்கே 23
அகத்திற் பொருந்திணை அத்தும்பை ஆகலான் ஆறுறுத்திப்
பகலவ னாலே பனிபடும் பாடாய்ப் பணித்துறுமா
அகலாத் துயரெலாம் ஆட்டங் கொளச்செய் அருந்தமிழா!
துகளாய்த் தொடங்கி முயல்வான் துணையெனச் சூழ்ச்சியில 24
சூழ்ந்தியான் செய்யத் துணிந்தன யாவும் துயர்விலக்கும்
ஆழ்ந்தியான் செய்ய அகத்தில் மகிழ்வால் அமைதியுளன்
தாழ்ந்துவ ணங்கித் தலைமேல் திருவடி தாங்குவனே
ஆழ்ந்தார்ந் திருக்கும் அடியர்தம் ஆர்வத் தருவிளக்கே 25
விளக்காய் விளங்கி வியனுல கெல்லாம் ஒளியருளும்
அளக்க வியலாப் பெரும்புகழ் கொண்ட அருந்தமிழைப்
பிளக்கும் வகையாய்ப் பிணக்குறு வார்தம் பிழைகளினை
உளங்களைந் தோட்டுக ஓரா நிலையவர் ஊழ்வினையே 26
ஊழ்வினை யாவும் உமதருட் பார்வை ஒளிபடவே
வாழ்வினை மேன்மை வழியிற் செலுத்தும் வளத்துடனே
ஆழ்வினை தன்னில் அகம்பொருந் தட்டும் அதுமகிழ்வு
பாழ்வினை யாற்றாப் பணிவுடை நெஞ்சம் படைத்தருள்வாய் 27
படைவீட் டெழுந்து பகைதீர்த் தருளும் பகலவனே!
தடைவீட் டிருந்து தடுத்தாண் டருள்க தமிழமுதம்
உடைவீட் டினிலே உவகை பெருக உமதடியார்
அடைவீட் டெழுக அவருளங் கொள்வதென் ஆழ்வதுவே! 28
ஆழ்ந்தொரு செய்கை அகத்தில் நிறைத்தியான் ஆற்றுதற்காய்ச்
சூழ்ந்து முனைவேன் சுடர்நெடு வேலோய்! துணையிருந்து
வீழ்ந்து விடச்செய் வினையெலாம் போக்குக மீப்பயனாய்
வாழ்ந்து மறைந்தார் வழிநிலை ஆய்ந்தெழ வாழ்த்துகவே 29
வாழ்த்துக ஊக்குக வாய்மலர்ந் தென்னை வருவழியில்
தாழ்த்தும் உளமொடு தாக்கும் கருத்துறை தன்னலத்தார்
ஆழ்த்துமச் சூழ்வலை ஆயன வெல்லாம் அறுத்தெறிந்தவ்
வீழ்த்தும் நிலைகளை யான்கடந் தேறும் விளைவருளே! 30
------ நிறைவுற்றது-----
பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி
வழிபடும் ஆர்வலர் வாழ்வுக்(கு) அணியென வாய்ப்பவனே!
விழிபட வேண்டி விருப்பொடு நின்றேன் விளைப்பவனே!
அழிபடல் இன்றி அகிலத்தார் உள்ளத்(து) அடியிருந்து
செழிபட வேண்டும் இயற்கைவே ளாண்மை சிறந்துலகே! 11
சிறந்து விளங்கவென் சிந்தனைக் குன்றன் றிருவருளைத்
திறந்து விடுக சிறுதுளி யேனும் செவியுணரும்
வறந்திரு காலம் வரந்தந் தருளும் வடிவழகா!
திறந்தந் தருள்க செயலறி யேனிச் சிறியவனே! 12
சிறுபரு வத்திருந் தென்னுடைச் சிந்தை செதுக்கிவழி
உறுபரு வத்தே உடையன வாக்கி ஒளிர்பவனே!
உறுசெயல் யாவும் உயருளச் சூழ்ச்சியில் ஓங்குதலுக்(கு)
அறுமுக வேலா! அருள்தரும் வேளா! அருமணியே! 13
மணிமா மயிலினில் மாவுல கெல்லாம் வலம்வரவே
கிணிகிணி கிண்கிணி யென்றொலி கேட்டுக் கிளர்ந்தெழுவேன்
அணிமொழி யாளின் அகத்தைக் களவுசெய் ஆருயிர!
கணிநீ யெனவழி காட்டிக் கனிதலின் கள்ளமிலேன் 14
கள்ள மிலாது கரும்பாய் இனிக்கக் கடத்தியுமிவ்
வுள்ளம் படும்பா(டு) உணர்வு படும்பா(டு) உணர்ந்தனையோ
கொள்கை முரணால் கொளாது நடக்கும் குடிமையினைத்
தெள்ளிய பாதையில் தேற்றி அருளுக தென்னவனே 15
தென்மொழி யானே திறலுடை யானே திருக்குமர!
இன்மொழி யாலுனை ஏத்தி மகிழ இருள்விலக்கும்
நன்மொழி யானே நலம்வேண் டினனே நயந்தியைந்த
பின்மொழி வேறு பிறக்குமோ நாவில் பெருமையனே 16
பெருங்குழப் பத்தைப் பெயர்த்து விழச்செய் பெருந்திறனை
அருளுக வேந்தே அருவி யெனுநின் னருள்விழியால்
பெருந்திர ளாகப் பெருந்திற லோடு பிணக்குடையார்
வருவது கண்டவர் தோள்கள் வருந்தப் பொருதவனே! 17
பொருப்பினைக் காக்கும் பொறுப்புடை யோனாய்ப் பொருந்தியகம்
விருப்புற் றமர்ந்து வினைதீர்த் தருளி விளைவளிக்கும்
ஒருதனிச் செம்மல் உயர்தமிழ்ச் செல்வன் உளங்கனிந்த
அருந்தவச் சேயோன் அமர்க்களம் வென்றான் அமரருக்கே 18
அமர முனிவர்தம் அல்லல் அகற்றி அவனியிலே
தமராய் வருவாரைத் தாங்கி அருளுந் தமிழவனே!
உமது கழனாடி ஊக்கந் தனைத்தேடி ஓடிவந்தேன்
எமது வழக்கை எடுத்தருள் வாயே எழிலவனே! 19
எழீஇ லெனுஞ்சொற்(கு) இலக்கண மாய இறையவனே
பொழீஇ லமர்ந்தாயைப் போற்றிக்கொண் டோடி வருபவர்தம்
இழீஇ நிலைமாற்றி இன்பெ னமுதூட்டி ஏற்றவரைத்
தழீஇக் கொளுந்தேவே! தாம்நினைப் பாரோ தலையெழுத்தே! 20
(தொடரும்)