தன்னிறை வென்றொன்று தான்கொளா - மின்னலாய்
எண்ணங்கள் மாற்றி எடுத்ததெலாம் வேண்டுமெனில்
வண்ணங்கொள் வாழ்வா? வதை 1
வதைபடு நெஞ்சினன் வன்சொல்லைக் கேளா(து)
உதைபடு நாளா உழன்று - கதைமாறுங்
கானத்து வாசமாய்க் காட்டி நடப்பனோ
ஈனத்(து) இழிபிறப்பா யான்? 2
யான்செய்த பாவமென்ன யாமத்தும் துஞ்சாது
வான்கொள் நிலவோடு வாட்டத்தைத் - தான்பகிர்வேன்
தேனாம் இனியவளே தேனீயாய்க் கொட்டியதால்
ஊனடங்கிப் போனேன் உழன்று 3
உழன்றுழன்(று) ஓடாய் உடைந்தழும் உள்ளம்
பழங்கதைகள் எல்லாஅம் பாழாய் - முழம்போட
வெற்றுக்கை வீசி வெறுக்கை வெறுத்தேனோ
பற்றுக்கோ(டு) இல்லாப் படி 4
படித்த படியான் படியான் எனையும்
அடியன் எனவாக்கல் ஆமோ? - முடியா
அடியா முழுதுண ராதார் அடைவேன்
அடியை அறியா தவன் 5
தவந்தாங்கி வாழ்ந்தேன் தனக்கு நிகரில்
எவரும் எனவிருந்தேன் இன்றும் - அவந்தாங்
ககமாய் நிகரிலேன் ஆனேனை இன்னும்
இகமாந் தழைக்கும் இனி? 6
இனியொன்று செய்வேன் எனவென்று நன்றாய்
நனிமகிழச் சூழ்ச்சி நலமே - பனிக்கின்ற
கண்ணாள் படும்பார்வை காணாது நொந்தேனா
பண்ணால் அகமாற்று வேன். 7
மாற்றுவேன் என்று மனமாறிச் சென்றறிந்தேன்
மாற்றங்கள் எல்லாம் மறையுமே - கூற்றமே
மாற்றரிய மாவிசையாம் மண்ணுயிர்க் கெல்லாஅம்
போற்றியுயிர்ப் பாக்கல் பொலிவு 8
பொலிவுடைய நெஞ்சிலும் போற்றுத லின்றி
நலிவடையும் எண்ணம் நடத்தும் - வலிய
விதியின்பால் நாளை விழாஅது காப்பாய்
மதியின்பம் சேர்க்கும் வழி 9
வழியறி யாது வகைதெரி யாது
சுழியினின்(று) ஒன்று துலங்கத் - தொழில்நடத்திச்
செல்லவொரு தூண்டுகோல் தேடுக வெல்லும்வாய்
இல்லையென்ப(து) இல்லையே என் 10
No comments:
Post a Comment