அமர்வு02 - சிற்றிலக்கியம்
தலைப்பு: நற்றமிழ் நான்மணிமாலை
காப்பு
நல்ல தமிழ்பற்றி நான்மணி மாலையிட
வல்லானே! வாழ்த்தி வணங்குவோம் - சொல்லால்
சுடச்சுடப் பாவியற்றத் தூணா யிருந்தே
தடங்கலின்றிப் பேரருள் தா!
அவையடக்கம்
ஆசு கவிச்சுழலாம் அந்தச்சூ றாவளியில்
பேசுதற்கு வந்தோம் பெருந்தகையீர் - தூசாம்யாம்
எங்கள் குறைபொறுப்பீர் ஏந்தலீர் பைந்தமிழாள்
செங்குரவீர் வாழ்க சிறந்து
1. தங்க மணியாரம் தமிழ்மீது சூட்டப்
பொங்குளத் தோடு பொதியில் வருகவே
2. கெழீஇய இன்பம் கேள்கா தளிக்கச்
செழீஇய உள்ளமொடு ஜெனிஅசோக் வருகவே
3. வடம்பிடித்துத் தமிழ்த்தேரை வழிநடத்திச் செல்ல
நடராசன் ஐயா நாடி வருகவே
4. நயாஅத் தோடு நற்பா நல்க
நியாஅஸ் மரைக்காயர் நேயமொடு வருகவே
நூற்பயன்
நன்மதி நாட்டம் நலமொடு தானீயும்
பொன்மதி யாந்தமிழ்ப் பேரிசைக்க - இன்பம்
பெருகிநல் வாழ்வளிக்கும் பேறு பலபெற்(று)
இருமையும் வாழ்வீர் இயைந்து.
No comments:
Post a Comment