Oct 3, 2021

தேங்காஅ நின்ற நினைவு

ஏங்காநின் றாளுமவன் எப்போது காண்பனெனத்
தாங்காஅ உள்ளத்துச் சாரத் தவிப்பவட்குள்
தேங்காஅ நின்ற நினைவு

தூங்கா விழியிரண்டில் தூணாவான் நெஞ்சுறைத்து
நீங்கா மொழிதன்னால் நீர்மையிலாச் சொல்பிதற்றித்
தேங்காஅ நின்ற நினைவு

ஆங்கா வலனென்(று) அகமுரைத்துத் தான்நீங்கத்
தேங்காதல் சொல்மொழிந்து தேடிவரு வன்பொருள்
தேங்காஅ நின்ற நினைவு

No comments:

Post a Comment