Nov 7, 2021

தமிழ்த்தாய்

அறுசீர் விருத்தம்

நெய்யவென் நெஞ்சில் நின்று
  நேர்வன எடுத்துக் கூறிச்
செய்யுதற் கின்பம் என்று
  செய்கையிற் புரிய வைத்துச்
செய்யுளால் இன்பந் தந்த
  செந்தமிழ்த் தாயைப் போற்றிக்
கையினைக் கூப்பு வேனே
  கண்களும் பனிக்கு மாறே

No comments:

Post a Comment