வாய்பாடு (விளம், மா, விளம், மா, விளம், காய்)
மலையிடைப் பிறந்து மழைதர வளர்ந்து வழித்தடம் அமைத்தோடிச்
சிலபல கிளைகள் சேர்ந்தெனை யூக்கச் செருக்கொடு குதித்தெழுந்து
கலைபல கற்றுக் கலகல வென்று கலித்துவந்(து) எழில்கூட்டி
நிலைபல கடந்து நித்திலந் தேடி நெடுங்கடல் புணர்வேனே
- தமிழகழ்வன்
No comments:
Post a Comment