Aug 2, 2021

வாய்

உண்பதற் குலகில் ஒராயிரம் உண்டு
கண்படும் எவையும் கருதி உண்பேன்
ஆசை தீரா அகத்துக் காகத்
தோசை நூறு தூர்ப்பேன் வயிற்றில்
கடுநோய்க் கெல்லாம் காரணம்
படுவாய் தானே பண்பிலன் யானே
வாய்ப்ப வெல்லாம் வாங்கி யுண்பேன்
வாய்ப்ப வெல்லாம் வகையாய் உரைப்பேன்
வாய்ப்புண் ணுக்கும் வாய்ப்புக்கும்
வாய்ப்ப தாமென் வாழ்க்கை யாமே

No comments:

Post a Comment