மொழியாய்ப் பிரிந்தநா ளன்றே உரிமை
மொழியாருக் கென்றே மொழி 431
ஒரேநா(டு) ஒரேமொழி யென்றுகொண் டாடல்
அரே!தர மின்றஃ(து) அழுக்கு 432
மொழிகாக்க வேண்டும் முதலான தேவை
அழிவில்லா வாழ்வுரிமை யே 433
தன்னிலத்து வாழ்வுரிமை காக்கா(து) அயலானை
இந்நிலத்(து) ஆளவிடல் ஏன்? 434
தன்னிறைவு கொண்டுதான் தான்வழங்கல் வேண்டுமெனல்
பொன்னென் மொழியன்றோ? போற்று 435
தன்மக்கள் வாழ்வொழித்துத் தானளிப்பான் மற்றவர்க்கு
மன்னவனோ? மாற்றான் மகன் 436
தமிழ்நாட்(டு) உரிமை தமிழர்க்(கு) உரித்தே
தமிழ்நாட்(டு) உரிமை தமிழ்க்கு 437
தமிழ்நாட்ட வேண்டாது தானடிமை யாகல்
தமிழ்நாடும் வேண்டாது காண் 438
அயலார்க் களித்தல் அயல்மொழி நாட்டல்
செயலார்க்கு? நில்லாதே! செல்! 439
காவாதான் காவல் கடுந்துன்பம் உண்டாக்கும்
தாவாதான் கொண்டு தடு 440
No comments:
Post a Comment