Jun 19, 2022

வண்ணப்பா

பைந்தமிழ்ச்சோலைத் தேர்வுத்தாள் வினா: 
பின்வரும் ஒருகலையைக் காண்க. அதனடிப்படையில் சந்தக்குழிப்பைக் கண்டறிந்து, கொடுக்கப்பட்ட ஒரு கலையை எங்காவது பயன்படுத்தி முழுமையான எழுதுக.

கெட்டுவிடப் போகுதுடல் விட்டுவிடப் போகுதுயிர்
கெட்டமனத் தாசையதற் - காளா காதே

-----------------------

தத்ததனத் தானதன தத்ததனத் தானதான
தத்ததனத் தானதனத் - தானா தானா

கிட்டுவதற் கோவெளிது திட்டமுடைத் தானதது
கெட்டததைக் காணுவதற் - கேயே தேதோ?
  கெட்டுவிடப் போகுதுடல் விட்டுவிடப் போகுதுயிர்
  கெட்டமனத்(து) ஆசையதற் - காளா காதே

குட்டிவிடப் பேருமிலை குற்றமுடைத் தானதிலை
குற்றுயிருக் கானமனத் - தாளா யாரோ
  குற்றமெனக் கோடுதலை நெற்றியினிற் சேரவிடு
  குற்றமொழித் தோருதலைக் - காணே நீயே

கட்டுமனத் தேயுனது கட்டளையைத் தாவலிலை
கட்டுமனைக் காரியுளத் - தேதாம் வாழ்வே
  கற்றநெறிக் காலுறைக குற்றமறுப் பானுயர்வு
  கற்றதனுக் கானமலைத் - தேனாம் வானாம்

தட்டுமனக் காமமது பட்டவலைத் தீமையவை
தட்டிவிடச் சேருவதைக் - கேளாய் நீயே
  தக்கநிலைப் பாழுமது சச்சரவைத் தாருமது
  சற்றுநினைப் போடதனைத் - தேராய் வாயே

No comments:

Post a Comment