பின்வரும் ஒருகலையைக் காண்க. அதனடிப்படையில் சந்தக்குழிப்பைக் கண்டறிந்து, கொடுக்கப்பட்ட ஒரு கலையை எங்காவது பயன்படுத்தி முழுமையான எழுதுக.
கெட்டுவிடப் போகுதுடல் விட்டுவிடப் போகுதுயிர்
கெட்டமனத் தாசையதற் - காளா காதே
-----------------------
கெட்டுவிடப் போகுதுடல் விட்டுவிடப் போகுதுயிர்
கெட்டமனத் தாசையதற் - காளா காதே
-----------------------
தத்ததனத் தானதன தத்ததனத் தானதான
தத்ததனத் தானதனத் - தானா தானா
கிட்டுவதற் கோவெளிது திட்டமுடைத் தானதது
கெட்டததைக் காணுவதற் - கேயே தேதோ?
கெட்டுவிடப் போகுதுடல் விட்டுவிடப் போகுதுயிர்
கெட்டமனத்(து) ஆசையதற் - காளா காதே
குட்டிவிடப் பேருமிலை குற்றமுடைத் தானதிலை
குற்றுயிருக் கானமனத் - தாளா யாரோ
குற்றமெனக் கோடுதலை நெற்றியினிற் சேரவிடு
குற்றமொழித் தோருதலைக் - காணே நீயே
கட்டுமனத் தேயுனது கட்டளையைத் தாவலிலை
கட்டுமனைக் காரியுளத் - தேதாம் வாழ்வே
கற்றநெறிக் காலுறைக குற்றமறுப் பானுயர்வு
கற்றதனுக் கானமலைத் - தேனாம் வானாம்
தட்டுமனக் காமமது பட்டவலைத் தீமையவை
தட்டிவிடச் சேருவதைக் - கேளாய் நீயே
தக்கநிலைப் பாழுமது சச்சரவைத் தாருமது
சற்றுநினைப் போடதனைத் - தேராய் வாயே
No comments:
Post a Comment