Jun 6, 2022

தத்துவோம் - 4

தத்துவோம் 001:

சில நேரங்களில் பெருமையை நிலைநாட்ட எருமையை மேய்க்க வேண்டியிருக்கிறது.

தத்துவோம் 002:

மனிதனின் இயல்பான குணங்களுள் ஒன்று பொறாமை (பொறுக்க முடியாமை). பொறாமையை மறந்து செய்யத் தகுந்தன செய்யின் வெற்றியே! பொறாமல் செய்யத் தகாதன செய்யின் அழிவே!

தத்துவோம் 003:

உலகில் மகான்களைவிடத் தன்னை மகானாக நினைத்துக் கொள்வோர் பலருண்டு.

தத்துவோம் 004:

பொய்யா உண்மையா என்று கேட்கும் காலத்திலன்றி
நம்பிக்கையா உண்மையா என்று கேட்கும் காலத்திலா வாழ்கிறோம்?

No comments:

Post a Comment