தத்துவோம் 001:
சில நேரங்களில் பெருமையை நிலைநாட்ட எருமையை மேய்க்க வேண்டியிருக்கிறது.
தத்துவோம் 002:
மனிதனின் இயல்பான குணங்களுள் ஒன்று பொறாமை (பொறுக்க முடியாமை). பொறாமையை மறந்து செய்யத் தகுந்தன செய்யின் வெற்றியே! பொறாமல் செய்யத் தகாதன செய்யின் அழிவே!
தத்துவோம் 003:
உலகில் மகான்களைவிடத் தன்னை மகானாக நினைத்துக் கொள்வோர் பலருண்டு.
தத்துவோம் 004:
பொய்யா உண்மையா என்று கேட்கும் காலத்திலன்றி
நம்பிக்கையா உண்மையா என்று கேட்கும் காலத்திலா வாழ்கிறோம்?
No comments:
Post a Comment