Jun 19, 2022

வண்ணப்பா

பைந்தமிழ்ச்சோலைத் தேர்வுத்தாள் வினா: 
பின்வரும் ஒருகலையைக் காண்க. அதனடிப்படையில் சந்தக்குழிப்பைக் கண்டறிந்து, கொடுக்கப்பட்ட ஒரு கலையை எங்காவது பயன்படுத்தி முழுமையான வண்ணப்பா எழுதுக.

இருவிழியு மூடாம லெனதுமன மாடாம
லிருமனமு மோயாது --- பூமானே

------------------
தனனதன தானான தனனதன தானான
தனனதன தானான – தானானா

இருவிழியு மூடாம லெனதுமன மாடாம
லிருமனமு மோயாது - பூமானே
   இதயமுழு தாளாம லினியவிசை கேளாம
   லிருமைநிலை மாறாம - லோடாதே

ஒருவழியும் பாராம லொருமைநிலை நீடாம
லுணருமொழி யோராமல் - வாழ்வேனோ
   ஒருதலைய தாகாது பசலையுறல் வீணாகும்
   உணர்வழிய லாகாது - தேமாவே

பெருமையொடு வாழாது பிழையைமனம் போறாது
பிரிவுநிலை யாகாது - வானேறும்
   பிறவிநிலை நீடாது பிறழலுற வீடேது
   பிரியமுள னேநீயும் - போகாதே

உருவழியும் ஊனாக உருகுமெழு காயாக
உதறிவிட லாகாது – வாவாவா
   உலகமதில் வீணாக ஒருபொழுதும் போகாமல்
   உறவுமுறை வீடாது - சேர்வோமே

No comments:

Post a Comment