பைந்தமிழ்ச்சோலைத் தேர்வுத்தாள் வினா:
பின்வரும் ஒருகலையைக் காண்க. அதனடிப்படையில் சந்தக்குழிப்பைக் கண்டறிந்து, கொடுக்கப்பட்ட ஒரு கலையை எங்காவது பயன்படுத்தி முழுமையான வண்ணப்பா எழுதுக.
இருவிழியு மூடாம லெனதுமன மாடாம
லிருமனமு மோயாது --- பூமானே
------------------
தனனதன தானான தனனதன தானான
தனனதன தானான – தானானா
இருவிழியு மூடாம லெனதுமன மாடாம
லிருமனமு மோயாது - பூமானே
இதயமுழு தாளாம லினியவிசை கேளாம
லிருமைநிலை மாறாம - லோடாதே
ஒருவழியும் பாராம லொருமைநிலை நீடாம
லுணருமொழி யோராமல் - வாழ்வேனோ
ஒருதலைய தாகாது பசலையுறல் வீணாகும்
உணர்வழிய லாகாது - தேமாவே
பெருமையொடு வாழாது பிழையைமனம் போறாது
பிரிவுநிலை யாகாது - வானேறும்
பிறவிநிலை நீடாது பிறழலுற வீடேது
பிரியமுள னேநீயும் - போகாதே
உருவழியும் ஊனாக உருகுமெழு காயாக
உதறிவிட லாகாது – வாவாவா
உலகமதில் வீணாக ஒருபொழுதும் போகாமல்
உறவுமுறை வீடாது - சேர்வோமே
No comments:
Post a Comment