Feb 28, 2019

உண்டாக்கினேன் புதிய கவிதை என்பான் - எண்சீர் விருத்தம்

கண்மூடித் தனமாக மீண்டும் மீண்டும்
    கண்டுபிடிக் கின்றதுள்ளல் என்னென் றாலோ
தொண்டறிந்த சக்கரத்தைக் காணா மூடர்
    தோண்டியகழ்ந் தெடுத்தபினே சொல்வ தைப்போல்
பண்பட்ட இலக்கணத்தைக் காணா மற்றான்
    பாட்டெழுதும் இலக்கணத்தைக் காணா மற்றான்
உண்டாக்கி னேன்புதிய கவிதை என்பான்
    உருப்பட்ட ஒன்றினையே வேண்டா வென்பான்

No comments:

Post a Comment