Apr 14, 2014

கார்த்திக் குமார் - பிறந்தநாள் வாழ்த்து

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எண்ணந்தோ யெல்லாமும் இனிக்கப் பேசும்
   இயல்பான உயருள்ள வள்ளல் வாழ்க!
வண்ணந்தான் பற்பலவாம் உளத்தே பறக்கும்
   வார்த்தையிலே உலகமெலாம் உயரே பறக்கும்
எண்ணாத எண்ணரிய எண்ணம் யாவும்
   எளிதாக உருவேற்றிச் சாதிப் பாய்நீ!
மண்ணாளும் மன்னன்போல் நீடு வாழ்க!
   மாசம்பத் தெல்லாமும் பெற்று வாழ்க!

                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment