Jan 12, 2016

கைக்கிளை

குறளடி வஞ்சிப்பா

உரையாதுறை பெருங்காதலும்
நிலையாநிலை யிருகால்களும் 
வருத்தந்தனைப் பெருக்கஞ்செயும்
பொருத்தங்கொள வுறக்கந்தொலைத்
தினியாதிய துயராகிடும்
நிலையொடு
வாழ்ந்தி ருக்கும் மனனே
தாழ்ந்தி ராதே தனிச்சுகந் தானே!
     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment