Jan 7, 2016

இரவி காந்த்

நிலைமண்டில ஆசிரியப்பா

'தலைவன்'  என்றனை!  எண்ணிப்  பார்க்கின் 
தலைவன்  நீதான்!  தனித்திறம்  பெற்ற 
உயர்பண்  பாளா!  உணர்வுக்குள்  உறைபவா!
துயரெலாம்  தொலையும்  துணைவந்  தால்நீ!  
சூரிய  னைக்கவர்  சுந்தர  மணியே! 
காரியம்  கண்ணெனக்  கொண்டவன்  நீயே!
எத்தகு  சூழலும்   இனிமைய  தாக
வித்தகா!  உன்னால்  மாற்றம்  பெறுமே!
உன்றன்  ஒருமொழி  விளைக்கும்  புதுமை 
நன்றென  நானே  உணர்ந்துள்  ளேனதை
உன்நா  உதிர்த்த  ஒவ்வொரு  மொழியும் 
என்னுள்  ஊக்கம்  விளைத்ததும்  உண்மை 
எண்ணங்கள்  இன்னும்  வளரவும்  அவைபல
எண்ணங்கள்  வளர்க்கவும்  வாழ்த்துகின்  றேனே!    

                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

12/03/2009

No comments:

Post a Comment