கடைந்தவெணம் குடைந்தகுணம் நடைதளர்ந்த(து) எனவே
உடைந்தமனம் அடைந்தவினப் படைமறத்தல் தகுமோ?
இடையிடையே இணங்கமுடி யாதிருக்க ஏதோ
மடைபோட்டுத் தடுத்தாலும் உடைத்துவெளம் வருமே!
Aug 31, 2023
Aug 23, 2023
மூன்றாம் சந்திரயான்
தென்புலம் காணத் தெளிந்து தெளிந்து
இன்புளத் தோடு இறங்கிய சந்திரயான்!
***
மூன்றாம் சந்திரயான்
அழகாய்த் தரை இறங்கியதை!
நிலவின் தென்துருவத்தை
வெற்றியோடு தொட்டது
வெற்றியோடு தொட்டது
விளங்கொளிக் கதிர்வீசி!
***
***
நிலவே! நலமா?
சந்திரயான் எனும் எந்திரன் யான்
வந்திறங்கினேன் மூன்றாம் தலையினன்
நீ சுற்றிவரும் தாய்ப் பூவுலகின்
பெருமக்கள் பரவலுடை
இந்தியாவின் வேட்கை
என் வேட்கை
உன் தென்புலத்துத் துருவத்தைக்
காணாத பல கண்களின் வேணவா தீர்க்க
விவேகத்தோடு விரைந்து வந்தேன்
எத்தனை எத்தனை உள்ளங்கள்
கைகூப்பி வேண்டிக் கைதட்டிக் கொண்டாடுகின்றன
வரலாற்றுச் சிறப்புடைத்தாய்
வார்த்தெடுத்துச் சூழ்ந்தனர்
வளமிக்க இந்தியர்!
இனி,
பாட்டி சுட்ட வடையை
வாங்கித் தின்ன நேரில் வருவர்
நேர்த்திக் கடன் செலுத்த விரைதல் போல
***
Labels:
வசன கவிதை
Aug 22, 2023
அருஞ்செயலுக்குத் தேவை ஆர்வமே
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆயிரம் உந்தல் இருந்தாலும்
ஆர்வமி லாத செயலென்னின்
மாயிருள் போலக் கண்கட்டும்
மடுவெனப் போகும் மாமலையும்
ஆயிரம் தடைகள் வந்தாலும்
ஆர்வம்நி றைந்த செயலுக்குத்
தீயன தாரா(து) அதுவளரும்
தெரிந்து செய்வீர் அருஞ்செயலே
ஆயிரம் உந்தல் இருந்தாலும்
ஆர்வமி லாத செயலென்னின்
மாயிருள் போலக் கண்கட்டும்
மடுவெனப் போகும் மாமலையும்
ஆயிரம் தடைகள் வந்தாலும்
ஆர்வம்நி றைந்த செயலுக்குத்
தீயன தாரா(து) அதுவளரும்
தெரிந்து செய்வீர் அருஞ்செயலே
Labels:
கவிதை
Subscribe to:
Posts (Atom)