காற்றினிலே - பூங்
நேரினிலே - நீ
நேர்கையிலே - ஒரு
வார்த்தையுமே - என்
வாயினின்று - வெளி
வாராமல் - மனம்
சோராமல் - ஆவல்
தீராமல்
உறைகின்றேன் - இதை
அறைகின்றேன் - நீ
பிறையன்றோ - மனச்
சிறையன்றோ - நல்
சுரமன்றோ - வலக்
கரமன்றோ - பெரு
வரமன்றோ
மனம் புகுவேனோ?
மணம் புரிவேனோ?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
காற்றினிலே - வரும்
பாட்டினிலே - செவி பெறுந்தேன்
ஊற்றினிலே - மனம்
மயங்குதற்போல் - தான்
இயங்குதற்போல்
பாட்டினிலே - செவி பெறுந்தேன்
ஊற்றினிலே - மனம்
மயங்குதற்போல் - தான்
இயங்குதற்போல்
நினைவினிலே - நீ
நேர்கையிலே - புவி
அனைத்தினையும் - நான்
மறக்கின்றேன் - உயிர்
துறக்கின்றேன் - மறு
பிறக்கின்றேன்
நேர்கையிலே - புவி
அனைத்தினையும் - நான்
மறக்கின்றேன் - உயிர்
துறக்கின்றேன் - மறு
பிறக்கின்றேன்
நேரினிலே - நீ
நேர்கையிலே - ஒரு
வார்த்தையுமே - என்
வாயினின்று - வெளி
வாராமல் - மனம்
சோராமல் - ஆவல்
தீராமல்
உறைகின்றேன் - இதை
அறைகின்றேன் - நீ
பிறையன்றோ - மனச்
சிறையன்றோ - நல்
சுரமன்றோ - வலக்
கரமன்றோ - பெரு
வரமன்றோ
மொழி பகர்வாயோ?
நுதல் பகிர்வாயோ?மனம் புகுவேனோ?
மணம் புரிவேனோ?
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment