Mar 15, 2016

ஒற்றிலா வெண்பா

நேரிசை வெண்பா 

திகடி கடலை தெளிய ருடனா
லகடு முகடு மறியா - வகட
விகட கவித மிதனை யெழுத
வகட கவித மது.
                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

பிரித்தறிய:

திகழ் திகழ் தலை தெளி யருள் தன்னால் அகடும் முகடும் அறியா அகட 
இகழ்தக விதம் இதனை எழுத அகழ்தக விதம்  அது.

2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

இதுவா புலமை? எதுவுமி லாத
எதுகை கவியா குமா?

சுப்பிரமணி சேகர் said...

எதுகையைக் கண்டீர் எதற்கெனக் காணா(து)
இதுவா புலமையென் றீர்

Post a Comment