நேரிசை ஆசிரியப்பாக்கள்
கவலை தெளிவைக் குலைக்கும் தீநோய்
தெளிவு குலைவ தாவது மறதி
மறதி மேற்கொண் டோடுவ தமைதி
அமைதி யில்லா வாழ்வஃ
தமைந்தோன் வாழான் அறிகு வாயே! 1
எவ்வெவற் றின்று கவலை நீங்கும்
அவ்வவற் றின்றே ஆக்கம் ஓங்கும்
இலையெனும் போதோ அகலும் கவலை
இயலுதல் கடத்தி நடத்தூ உம்மே
அவ்வழி நடத்தலும் மறதி யாகிச்
செவ்வழி தொலைத்த வீரன்
உய்வழி யறியா துழன்றிடு வானே! 2
கவலை கண்ணு றங்க விடாது
கண்ணு றங்கினும் கனவில் விடாது
கவலை இருவகை கிட்டாக் கவலை
கிட்டிட வேண்டும் இலட்சியக் கவலை
முன்னது வீணே பின்னது தானே
கவலை நிலையைத் தாண்டிக்
குறிக்கோள் என்க குவலயத் தானே! 3
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.
கவலை தெளிவைக் குலைக்கும் தீநோய்
தெளிவு குலைவ தாவது மறதி
மறதி மேற்கொண் டோடுவ தமைதி
அமைதி யில்லா வாழ்வஃ
தமைந்தோன் வாழான் அறிகு வாயே! 1
எவ்வெவற் றின்று கவலை நீங்கும்
அவ்வவற் றின்றே ஆக்கம் ஓங்கும்
இலையெனும் போதோ அகலும் கவலை
இயலுதல் கடத்தி நடத்தூ உம்மே
அவ்வழி நடத்தலும் மறதி யாகிச்
செவ்வழி தொலைத்த வீரன்
உய்வழி யறியா துழன்றிடு வானே! 2
கவலை கண்ணு றங்க விடாது
கண்ணு றங்கினும் கனவில் விடாது
கவலை இருவகை கிட்டாக் கவலை
கிட்டிட வேண்டும் இலட்சியக் கவலை
முன்னது வீணே பின்னது தானே
கவலை நிலையைத் தாண்டிக்
குறிக்கோள் என்க குவலயத் தானே! 3
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.
No comments:
Post a Comment