Jun 2, 2025

உண்மை

தன்னுள்ளம் நன்று பிறனுள்ளம் தீதென
உன்னு மடத்தனத்தார் ஓடாகத் தேய்ந்தாலும்
உன்னா துலகவரை ஒன்றாகக் காணாது
மன்னு மிதுவே மறை

சும்மா இருத்தல் சுகம்

ஆய்ந்த பொருள்கண்டோர் ஆயிரஞ் செய்தாலும்
வாய்ந்த நிறைநிலை வாராதே - வாய்ந்தமையா(து)
உம்மா லியலாத ஒன்றைச் செயப்புகற்குச்
சும்மா இருத்தல் சுகம்
😂

பொலிவொடு வாழ்க

செவியி னிக்கும் நன்மொழி சேரக்
கவியி னிக்கும் யாப்புடைக் கலையாய்ச்
சுவையி னிப்பாய்ச் சுடர்மதி யுறவாய்ப்
புவியிற் பூஉம் பொலிவொடு வாழ்க!

🌟🌟🌟🌟🌟🌟