அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Jun 2, 2025
உண்மை
தன்னுள்ளம் நன்று பிறனுள்ளம் தீதென
உன்னு மடத்தனத்தார் ஓடாகத் தேய்ந்தாலும்
உன்னா துலகவரை ஒன்றாகக் காணாது
மன்னு மிதுவே மறை
சும்மா இருத்தல் சுகம்
ஆய்ந்த பொருள்கண்டோர் ஆயிரஞ் செய்தாலும்
வாய்ந்த நிறைநிலை வாராதே - வாய்ந்தமையா(து)
உம்மா லியலாத ஒன்றைச் செயப்புகற்குச்
சும்மா இருத்தல் சுகம்
😂
பொலிவொடு வாழ்க
செவியி னிக்கும் நன்மொழி சேரக்
கவியி னிக்கும் யாப்புடைக் கலையாய்ச்
சுவையி னிப்பாய்ச் சுடர்மதி யுறவாய்ப்
புவியிற் பூஉம் பொலிவொடு வாழ்க!
🌟🌟🌟🌟🌟🌟
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)