அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Jul 7, 2025
கருத்து வேறுபாடு
வானம் நீலம் என்றாய்
வானம் நீளம் என்றேன்
தென்றல் போல்வாய் என்றேன்
தென்றலும் ஆகா மெல்லியலாய்
விருது பெருமை என்றாய்
விருதுக்கே பெருமை என்றேன்
கருதும் கருத்து வேறு
காணும் கனவுகள் வேறு
இருந்தும் வாழ்க்கை ஒன்றென்று
இணையாய்த் திரிவோம் இன்று
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment