Oct 14, 2025

பெருங்கருணை

ஈர்ப்பு விதியென இயற்பியல் உரைக்கினும்
சேர்ப்ப தென்னவோ செயும்பெருங் கருணையே
சீர்த்த மனத்தினர் செம்மையாய் அறிகுவர்
ஆர்த்த அன்பினால் அரும்பெரு வெளியமே

Oct 12, 2025

விழுதாய் வியக்கும் சிற்றறிவன்

பொழுது சாயுங் காலத்தே
    பொன்னாய் மின்னும் மின்னோடே
கெழுத கைமை வாய்ந்தவராம்
     கேள்வி ஞானம் வாய்த்தவராம்
தொழுத கையார் பாலாஜி
      தோன்றும் ஞானம் தானுரைப்பார்
விழுதாய் வியக்கும் சிற்றறிவன்
     விரையத் துணிவேன் வீட்டுக்கே