அகழ்வனாக்கம்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணியின் படைப்புகள்
Oct 14, 2025
பெருங்கருணை
ஈர்ப்பு விதியென இயற்பியல் உரைக்கினும்
சேர்ப்ப தென்னவோ செயும்பெருங் கருணையே
சீர்த்த மனத்தினர் செம்மையாய் அறிகுவர்
ஆர்த்த அன்பினால் அரும்பெரு வெளியமே
Oct 12, 2025
விழுதாய் வியக்கும் சிற்றறிவன்
பொழுது சாயுங் காலத்தே
பொன்னாய் மின்னும் மின்னோடே
கெழுத கைமை வாய்ந்தவராம்
கேள்வி ஞானம் வாய்த்தவராம்
தொழுத கையார் பாலாஜி
தோன்றும் ஞானம் தானுரைப்பார்
விழுதாய் வியக்கும் சிற்றறிவன்
விரையத் துணிவேன் வீட்டுக்கே
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)