Oct 12, 2025

விழுதாய் வியக்கும் சிற்றறிவன்

பொழுது சாயுங் காலத்தே
    பொன்னாய் மின்னும் மின்னோடே
கெழுத கைமை வாய்ந்தவராம்
     கேள்வி ஞானம் வாய்த்தவராம்
தொழுத கையார் பாலாஜி
      தோன்றும் ஞானம் தானுரைப்பார்
விழுதாய் வியக்கும் சிற்றறிவன்
     விரையத் துணிவேன் வீட்டுக்கே

No comments:

Post a Comment