Jul 10, 2014

சேர்த்தெழுதுதலி னினிமை

நீடாழி யுலகத்து மறைநாலோ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராஜன் மாபார தஞ்சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெ ழுத்தாணிதன்
கோடாக யெழுதும்பி ரானைப்ப ணிந்தன்பு கூர்வாமரோ

                                                  - மகாபாரதம்

இங்ஙனஞ் செய்யுற்றமிழிலு முரைநடையிலுஞ் சேர்த்தெழுதிப் பழகுதல் மனத்திற் கெவ்வள வினிமை நல்குகிறதென்பதை யாரிடம்போய் யான்சொல்வேன்.

என்றோழி யெனக்கென்றன் பிள்ளைக்கால் பயில்தமிழை
நன்றாக நினைவுறுத்தி நலமின்பங் கொளச்செய்தா - ளவள்
நன்றாக யிவ்வுலகம் போற்றிடவே வாழ்கவென
நெஞ்சார வாழ்த்துகிறேன் வேறென்ன யினிதுலகில்

                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:

Post a Comment