எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சொல்லுமிதழ் சீர்சந்தம் சோலை மலரத்
தோன்றுமொளிக் கதிர்பரவிச் சிவந்தி ருக்கும்
எல்லிறைவன் தேவையறிந் துலகு மேத்தும்
இல்லாமல் யாதுமிவண் இல்லென் றாகும்
நில்லாநின் றிங்குநிலை நேயம் வளர்க்கும்
நெறிநின்று நேர்செல்லும் கதிர வா!நீ
பல்லாண்டு வாழ்கநலம் பார்சுற் றத்தார்
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்த வென்றே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.
சொல்லுமிதழ் சீர்சந்தம் சோலை மலரத்
தோன்றுமொளிக் கதிர்பரவிச் சிவந்தி ருக்கும்
எல்லிறைவன் தேவையறிந் துலகு மேத்தும்
இல்லாமல் யாதுமிவண் இல்லென் றாகும்
நில்லாநின் றிங்குநிலை நேயம் வளர்க்கும்
நெறிநின்று நேர்செல்லும் கதிர வா!நீ
பல்லாண்டு வாழ்கநலம் பார்சுற் றத்தார்
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்த வென்றே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.
No comments:
Post a Comment