நிலைமண்டில ஆசிரியப்பா
என்னினைத் தனையோ? எனையழைத் தாயென்?
என்னுளம் அறியவோ? உன்னுளம் உரைக்கவோ?
உனையறி குவனோ? உணரா தவனோ?
உனையறி குவனென உணராத் தவனோ?
எனக்கென் றெழுதி யிருப்பின் யாவன்
எனக்கில் லையெனத் தடுக்க வல்லோன்?
எனக்கா யெழுதி யிராத தாயின்
தனக்கில் லையெனத் தனிநின் றொழுகுவன்
சொல்லவி ழைந்தேன் சொல்லவி ழைந்தன
சொல்லவி ழவிலை சொலநா வெழவிலை
சொல்லேன் உண்மை சொல்லொ ணாத
அல்லல் தரூஉம் ஆதலின் அன்பே!
- தமிழகழ்வன்
என்னினைத் தனையோ? எனையழைத் தாயென்?
என்னுளம் அறியவோ? உன்னுளம் உரைக்கவோ?
உனையறி குவனோ? உணரா தவனோ?
உனையறி குவனென உணராத் தவனோ?
எனக்கென் றெழுதி யிருப்பின் யாவன்
எனக்கில் லையெனத் தடுக்க வல்லோன்?
எனக்கா யெழுதி யிராத தாயின்
தனக்கில் லையெனத் தனிநின் றொழுகுவன்
சொல்லவி ழைந்தேன் சொல்லவி ழைந்தன
சொல்லவி ழவிலை சொலநா வெழவிலை
சொல்லேன் உண்மை சொல்லொ ணாத
அல்லல் தரூஉம் ஆதலின் அன்பே!
- தமிழகழ்வன்
No comments:
Post a Comment