எம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை இரேவதி அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரங்கற்பா
ஆசுஇரியும் ஆசிரியை ஆர்வமுடன் பேசுமெங்கள்
மாசுஇரியும் மாமேதை மாணிக்கத் தேவதைஉன்
பாசத்தை யாமறவோம் பண்பான இரேவதியார்
பேசுமுகம் என்றினியாம் காண்போமோ காண்போமோ? 1
பட்டங்கள் பெற்றாலும் பகுத்தறிவு பெற்றாலும்
சட்டங்கள் செய்தாலும் சரித்திரமே செய்தாலும்
பட்டறிவு கற்பித்த பாசமிகு இரேவதியார்
உள்தூணாய் இருப்பாரை உளமார வணங்குகிறேன் 2
அருமையென்(று) உணர்ந்த எம்மை
அருமையென்(று) உலகம் போற்றப்
பெருமையெய் திடச்செய்(து) அன்பின்
பெருவழி தன்னில் காத்தே
இருளெனக் கிடந்த எல்லாம்
இரிந்திடச் செய்தாய் போற்றி
மருளெனப் பட்ட யாவும்
மருண்டிடச் செய்தாய் போற்றி 3
எண்களும் எழுத்தும் சொல்லி
ஏற்றத்தை வாழ்வில் காட்டிப்
பண்களில் நீதி சொல்லிப்
பாதையில் உண்மை சொல்லிக்
கண்களில் வாழும் எங்கள்
கனிவான சோதி நீங்கள்
கண்களில் நீரைக் காட்டிக்
கதறிடும் நிலையில் யாமே 4
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
இரங்கற்பா
ஆசுஇரியும் ஆசிரியை ஆர்வமுடன் பேசுமெங்கள்
மாசுஇரியும் மாமேதை மாணிக்கத் தேவதைஉன்
பாசத்தை யாமறவோம் பண்பான இரேவதியார்
பேசுமுகம் என்றினியாம் காண்போமோ காண்போமோ? 1
பட்டங்கள் பெற்றாலும் பகுத்தறிவு பெற்றாலும்
சட்டங்கள் செய்தாலும் சரித்திரமே செய்தாலும்
பட்டறிவு கற்பித்த பாசமிகு இரேவதியார்
உள்தூணாய் இருப்பாரை உளமார வணங்குகிறேன் 2
அருமையென்(று) உணர்ந்த எம்மை
அருமையென்(று) உலகம் போற்றப்
பெருமையெய் திடச்செய்(து) அன்பின்
பெருவழி தன்னில் காத்தே
இருளெனக் கிடந்த எல்லாம்
இரிந்திடச் செய்தாய் போற்றி
மருளெனப் பட்ட யாவும்
மருண்டிடச் செய்தாய் போற்றி 3
எண்களும் எழுத்தும் சொல்லி
ஏற்றத்தை வாழ்வில் காட்டிப்
பண்களில் நீதி சொல்லிப்
பாதையில் உண்மை சொல்லிக்
கண்களில் வாழும் எங்கள்
கனிவான சோதி நீங்கள்
கண்களில் நீரைக் காட்டிக்
கதறிடும் நிலையில் யாமே 4
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment