Mar 8, 2022

இனிய மங்கையர் திருநாள் வாழ்த்துகள்

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

ஆக்கம் அழிவாய அவ்விரண்டும் பெண்ணவளின்
நோக்கிற் புதைந்துள நுண்பொருளால் நேருமே
தீக்கிணை யாரே தெளி

நேரிசைச் சிந்தியல் வெண்பா

தாயாய் மகளாய்த் தகுந்தநற் றாரமாய்ச்
சாயாத உள்ளத்துச் சான்றவளாய் - ஓயாத
தொண்டால் உயர்ந்தாள் தொடி

நிலைமண்டில ஆசிரியப்பா

மாண்புறு பெண்ணே! வயங்கொளிக் கண்ணே! 
காண்புறும் இன்பே! கனியே! அமிழ்தே! 
கைக்கொள் யாவும் மெய்ப்பொருள் ஆக்கி 
உய்வழி காணும் உயர்ந்த மணியே! 
வாழ்க! உள்ளம் மகிழ்வால் நிறைந்து 
வாழ்க! நாளும் பல்லவை ஆண்டே!

No comments:

Post a Comment