எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கண்ணா!உன் கண்வலியைக் கண்டே உள்ளம்
கொண்டபதைப் பெல்லாம்நான் என்ன சொல்வேன்
கண்ணெவ்வா றுள்ளதெனக் கேட்ட தற்குன்
கண்ணைநி ழற்படமெ டுத்த னுப்பிக்
கண்கலங்க வைத்தனையஃ தாரோ என்றென்
எண்ணத்தில் தோன்றியதை எழுத்தில் சேர்க்க
கொண்டவழ குத்தேவ தைத்தாய்! என்னே!
கொஞ்சுமெழிற் சொல்லாலே விடைப கர்ந்தாய்!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
கண்ணா!உன் கண்வலியைக் கண்டே உள்ளம்
கொண்டபதைப் பெல்லாம்நான் என்ன சொல்வேன்
கண்ணெவ்வா றுள்ளதெனக் கேட்ட தற்குன்
கண்ணைநி ழற்படமெ டுத்த னுப்பிக்
கண்கலங்க வைத்தனையஃ தாரோ என்றென்
எண்ணத்தில் தோன்றியதை எழுத்தில் சேர்க்க
கொண்டவழ குத்தேவ தைத்தாய்! என்னே!
கொஞ்சுமெழிற் சொல்லாலே விடைப கர்ந்தாய்!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment