எனக்கு மேலே ஏதோ ஒரு சத்தி,
என் மனத்தில் ஏற்படும் பல்லாயிரத் துணுக்குகளுக்கான சிந்தனைகளை என் மூளை என்னும் RAM-ல் ஏற்றி,
அவ்வப்போது, மறக்கக்கூடாத சில எண்ணங்களை ஆழ்மனம் என்னும் Paging space பகுதிக்குத் தள்ளி,
ஒரு கணப்போதில் இத்தனை செயல்களை மட்டும்தான் இவனால் தாங்க முடியும் எனக் கணக்கிட்டு,
அத்தனை செயல்களை மட்டும் இயக்கும் வல்லமையைத் தந்து, தேவையானவை, தேவையற்றவை எனத் தருணத்திற்கேற்பப் பிரித்தாளும் வல்லமையைத் தந்து,
இந்த இயங்கு தளத்தை (Operating System) இயக்க வைக்கும்
அந்தச் சத்தியை (Operator) என்னவென்று சொல்வது?
உணர்ந்தபின் ஒன்றுமில்லாதது,
உணராத வரையில், உயர்வானதுதான்!!!
No comments:
Post a Comment