Jan 8, 2019

நித்திரை கலைந்தேன் தேவதையே!

என்
நெஞ்சம் குளிர்ந்தது நேசம் மலர்ந்தது
நித்திரை கலைந்தேன் தேவதையே!
உன்
செவ்விய சொல்லால் செம்மொழி யானேன்
சித்திரம் போல நின்றாயே!

என்
கண்ணில் பற்றிய காதல் தீ
நெஞ்சில் பற்றிய காட்டுத்தீ

மின்னலே! என் கண்ணில் தோன்றிய மின்னலே!
கன்னலே! என் சொல்லில் தோன்றிய கன்னலே!

காரிரு ளான காதல் காட்டில்
கண்ணைக் கட்டி விட்டாயே!
கண்கள் சிமிட்டி என்னைத் தூண்டிக்
கவிஞன் ஆக்கி விட்டாயே!

வண்ணப் பட்டங்கள் வானில் மட்டுமா?
எண்ணப் பட்டங்கள் ஏட்டில் மட்டுமா?

No comments:

Post a Comment