Jun 18, 2020

துணையென வருவாய் அன்பே! - அறுசீர் விருத்தம்

நெஞ்சிலே தைத்த சொற்கள் 
    நேரிலே கண்ட கண்கள் 
பஞ்சிலே வைத்த தீயாய்ப் 
   பற்றிய தென்னே! கண்ணே!
அஞ்சிலே ஒன்றை வைத்த
   அனுமனின் செயலே அன்றோ?
துஞ்சியே வீழு முன்னே 
    துணையென வருவாய் அன்பே!

No comments:

Post a Comment