Sep 13, 2020

மணிக்குறள் - 11. தீண்டாமை ஒழிக

தீண்டா தொழுகல் ஒழுக்கமெனச் சொல்லுதல்
வேண்டாமை வேண்டும் நிலத்து                                101

திட்டமிட்டுத் தீண்டாமைத் தீக்கொள்கை ஏற்படுத்தி
வட்டமிட்டு வாட்டுவதோ மாண்பு?                            102

உள்ளம் உடைமை உயர்விழிவு பாராமை
கள்ளம் பிறிதென்று காண்                                            103

பாவம் பெருங்குற்றம் பாரில் மனிதமின்மை
தேவையிலாத் தீநோயே தீய்                                        104

யாவரும் கேளிரென யாவரும் நோக்கும்நாள்
நோவறு நாளாம் நுவல்                                                    105

எல்லாம் தொழிலே இழிவில்லை என்றுணர்க
எல்லார்க்கும் வானம் இனிது                                        106

அறிவுடைமை என்பதி யாதெனின் நெஞ்சச்
செறிவுடைமை நேயத்துக் கண்                                   107

படும்பா(டு) அறியாத பாழ்மக்கள் நெஞ்சம்
கொடும்பாவம் செய்துள்ள கூடு                                  108

மதமினம் சாதி மொழிநிறம் என்று
விதவிதமாய்க் கொல்லும் விலங்கு                            109

விலக்கல் கொடிது விளக்கல் கடமை
மலர்ச்சி மனிதன் மனத்து                                              110

No comments:

Post a Comment