தீண்டா தொழுகல் ஒழுக்கமெனச் சொல்லுதல்
வேண்டாமை வேண்டும் நிலத்து 101
திட்டமிட்டுத் தீண்டாமைத் தீக்கொள்கை ஏற்படுத்தி
வட்டமிட்டு வாட்டுவதோ மாண்பு? 102
உள்ளம் உடைமை உயர்விழிவு பாராமை
கள்ளம் பிறிதென்று காண் 103
பாவம் பெருங்குற்றம் பாரில் மனிதமின்மை
தேவையிலாத் தீநோயே தீய் 104
யாவரும் கேளிரென யாவரும் நோக்கும்நாள்
நோவறு நாளாம் நுவல் 105
எல்லாம் தொழிலே இழிவில்லை என்றுணர்க
எல்லார்க்கும் வானம் இனிது 106
அறிவுடைமை என்பதி யாதெனின் நெஞ்சச்
செறிவுடைமை நேயத்துக் கண் 107
படும்பா(டு) அறியாத பாழ்மக்கள் நெஞ்சம்
கொடும்பாவம் செய்துள்ள கூடு 108
மதமினம் சாதி மொழிநிறம் என்று
விதவிதமாய்க் கொல்லும் விலங்கு 109
விலக்கல் கொடிது விளக்கல் கடமை
மலர்ச்சி மனிதன் மனத்து 110
No comments:
Post a Comment