பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பொங்கும் உள்ள மகிழ்வுக் களவே இல்லை இப்போது
புனலும் தடமும் போல நீங்கள் வாழ்க பல்லாண்டு
தங்கும் மகிழ்ச்சி என்றும் குறையாத் தனித்தன் மையோடு
தனநடம் என்னும் செல்வம் பெற்று வீறு நடைபோடு
சங்கம் என்னும் நெஞ்சம் ஆளும் திறமை தன்னாலே
சரித்திரம் சொல்லும் தனிப்புகழ் பெறுவீர் உலகின் முன்னாலே
குங்கும நுதற்கண் பார்வையால் காணும் தின்மைகள் இரியட்டும்
குதூகலம் பொங்கும் இத்திரு நாளில் நன்மைகள் பெருகட்டும்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
பொங்கும் உள்ள மகிழ்வுக் களவே இல்லை இப்போது
புனலும் தடமும் போல நீங்கள் வாழ்க பல்லாண்டு
தங்கும் மகிழ்ச்சி என்றும் குறையாத் தனித்தன் மையோடு
தனநடம் என்னும் செல்வம் பெற்று வீறு நடைபோடு
சங்கம் என்னும் நெஞ்சம் ஆளும் திறமை தன்னாலே
சரித்திரம் சொல்லும் தனிப்புகழ் பெறுவீர் உலகின் முன்னாலே
குங்கும நுதற்கண் பார்வையால் காணும் தின்மைகள் இரியட்டும்
குதூகலம் பொங்கும் இத்திரு நாளில் நன்மைகள் பெருகட்டும்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment