Oct 11, 2020

மணிக்குறள் - 15. ஐம்பொறி அடக்கு

அளவினில் மிஞ்சின் அமிழ்தமும் நஞ்சாம்
களவின்றி ஐம்பொறியைக் கா.                           141

தொற்றுகின்ற நுண்மிகளைத் தூர விலக்கிவைத்துப்
பற்றுகின்ற ஐம்பொறியைக் கா                         142

உடலின் நலனே உளத்தின் நலனாம்
உடலினை ஓம்பல் உயர்வு                                       143

நல்லன பேசுகின்ற நாவுடை வாயினால்
பொல்லா தனவிலகும் போற்று                             144

வாய்சொல்லில் உண்மை வளம்வாழ அவ்வகத்து
வாய்ச்சொல்லை வாய்மையென் பார்              145

பார்ப்பதால் பற்றும் பயனில யாவையும்
ஆர்ப்பதால் நெஞ்சுக்(கு) அழிவு                            146

கண்களால் கைதுசெய் கைப்பேசி நம்முடைய
கண்களைக் கைது செயும்.                                      147

மூக்கைத் துளைக்கும் முடிவிலாப் பண்டத்தால்
நாக்கைத் துளைக்க நலிவு                                       148

நல்லன கேட்டலே நல்வழிக்குப் பாதையாம்
அல்லன நீக்கல் அறிவு                                                149

மெய்வாய்கண் மூக்குசெவி மேன்மை யுணர்ந்தறிந்து
பொய்வாயில் வீழாது போற்று                               150

No comments:

Post a Comment