அளவினில் மிஞ்சின் அமிழ்தமும் நஞ்சாம்
களவின்றி ஐம்பொறியைக் கா. 141
தொற்றுகின்ற நுண்மிகளைத் தூர விலக்கிவைத்துப்
பற்றுகின்ற ஐம்பொறியைக் கா 142
உடலின் நலனே உளத்தின் நலனாம்
உடலினை ஓம்பல் உயர்வு 143
நல்லன பேசுகின்ற நாவுடை வாயினால்
பொல்லா தனவிலகும் போற்று 144
வாய்சொல்லில் உண்மை வளம்வாழ அவ்வகத்து
வாய்ச்சொல்லை வாய்மையென் பார் 145
பார்ப்பதால் பற்றும் பயனில யாவையும்
ஆர்ப்பதால் நெஞ்சுக்(கு) அழிவு 146
கண்களால் கைதுசெய் கைப்பேசி நம்முடைய
கண்களைக் கைது செயும். 147
மூக்கைத் துளைக்கும் முடிவிலாப் பண்டத்தால்
நாக்கைத் துளைக்க நலிவு 148
நல்லன கேட்டலே நல்வழிக்குப் பாதையாம்
அல்லன நீக்கல் அறிவு 149
மெய்வாய்கண் மூக்குசெவி மேன்மை யுணர்ந்தறிந்து
பொய்வாயில் வீழாது போற்று 150
No comments:
Post a Comment