கண்டறிந்த சக்கரத்தைக் கண்டறிவேன் என்னாது
பண்டறிந்தோர் பாட்டினைப் போற்று 131
புத்தறி வுக்குப் பொலிவூட்டல் சான்றோரின்
பட்டறி வென்றே அறி 132
காலமெலாம் கண்டறிந்து காட்டும் வழித்துணை
மேலவராம் சான்றோரைப் போற்று 133
பெரியோரைப் போற்றிப் பெருமையுள பாடம்
அறியும் அறிவே அறிவு 134
பொல்லாச் சுரத்தும் பொலிவுற நல்லோர்
அறிவுரை நற்றுணை யாம். 135
இற்றைப் புரட்சியால் இவ்வுலகோ? இல்லையில்லை
எற்றைக்கும் ஏற்பட்ட(து) ஏற்று. 136
வாரி வழங்கி வளங்குவித்தல் வாய்த்தலுக்(கு)
ஆரியங்கி ஆக்குவித் தார்? 137
ஆதி முதற்கொண்(டு) அகழ்ந்தார் வழியெலாம்
வேதி மரபணுவின் வேர் 138
நன்மையன்றித் தீமையில்லை நாளும் நலம்பயக்கும்
பொன்மொழியர் சான்றோரைப் போற்று 139
ஈன்று புறந்தந்தும் இன்னாவி கொண்டுழைத்தும்
சான்றுக்கே சான்றானார் சார் 140
No comments:
Post a Comment